Dec 29, 2013

மலர் தேடும் தும்பியே!

கடும் தாகத்தோடு
மலருக்கு மலர் பறந்து
மது பருகும் தும்பியே
உன் தாகம் தீர்ந்ததா?

ஒருமுறை என் காதலியின்
இதழ்களின் மதுவைத் தான்
பருகிப்பாறேன்...

உன் தாகம் மறைந்து
மோகம் கொண்டு
மலருக்குப் பதில்
அவளையே சுற்ற ஆரம்பித்துவிடுவாய்,
என்னைப் போலவே...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Dec 22, 2013

சிறைப் பறவையின் காதல்

உன் விழிகள் இரண்டும்
என் இதயம் துளைக்கும்
வில் அம்புகள்...

உன் அம்புகள் துளைத்த
என் இதயத்தில் வழிவது
குருதி அல்ல- அது என் காதல்...

என் திசையெங்கும்
காற்றாய் சூழ்ந்திருக்கிறது
எனை திணறடிக்கும் உன் காதல்...

சுவாசிப்பது காற்றை அல்ல.
உன் காதலை...

தொடுவானமாய் ஆகிவிட்டதென்
காதல்...

தொட்டுவிடும் தொலைவில் நீ
தொட இயலாத தொலைவில் நான்...

காரணம்-
இது சிறைப் பறவையின்
சிறகொடிந்த காதல்...

திருமதி.வெ.தேவி...
தஞ்சை....

தோழி திருமதி.தேவி வெற்றிவேல்  தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இல்லத்தரசி. இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிய கவிதை இது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Dec 18, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -3

சாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.

Dec 11, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -2

முன்பொருநாள் சாரங்கலன்1 என்னும் சிறுவன் தன்னந் தனியாக சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கொரு பேய்மகள் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தின்றுகொண்டு எலும்புகளை கையிலேந்தி இரத்தம் சொட்ட சொட்ட கூத்தாடிக் கொண்டிருந்தாள். இதனைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய நடுநடுங்கி, பயந்து ஓடிவந்து தாய் கோதைமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதைமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை.

Dec 7, 2013

உதிரும் நான் -26

வரம் வேண்டியே  
தவமிருப்பர்  
அனைவரும்...

நானோ காதல்  
வரத்தைப் பெற்றபின்னும்
தவமிருந்து கொண்டிருக்கிறேன்  
அவள் தரிசனத்திற்க்காய்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

  

Dec 4, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -1

ஈழம், யவனம், சாவகத் தீவு, பவளத்தீவு, பாண்டிய நாடு, சீனம், கடாரம்  போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும் கவரும் மாபெரும் துறைமுக நகரமாக நாவலந்தீவினுள் அமைந்திருந்த மாபெரும் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது புகார்.

பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.
 

Nov 4, 2013

உதிரும் நான் -25

ரெட்டை விழி 
பார்வையாலே 
நெஞ்சோரம் 
உரசிப் போனவள்,

ரெட்டைக் கிளி
தீப்பெட்டியாய் 
மனதைப் பற்ற 
வைத்துவிட்டாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி.

உதிரும் நான், இரவின் புன்னகை, ரெட்டைக் கிளி, வேல் விழி, மின்னல், Minnal


Oct 26, 2013

உதிரும் நான் -24

உதடு சுழித்து
கன்னம் கனியக்கனிய
அவள் கொடுக்கும்
முத்தங்களில்...

அடை மழையில் 
குடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

உதிரும் நான், முத்தம், கன்னத்தில் முத்தம், காதல், Love, Love poets, காதல் கவிதைகள், கவிதை, மின்னல், minnal

Oct 23, 2013

உதிரும் நான் -23

காதல் தவத்தில்
நித்தமும்
வெந்துகொண்டிருக்கிறேன்
அவளுக்காய்...

வரம் கொடுக்கிறேனென்று 
எந்த தெய்வமும்
கலைத்துவிடாமல் இருக்கட்டும்
என் தவத்தை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Oct 21, 2013

தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட காலமானதேன்?

களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், களப்பிரர்கள் எனப்படுபவர்கள் என்பவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற இலக்கிய மாற்றங்கள் மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றியும் கடந்த மூன்று பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் களப்பிரர்கள் காலம் மட்டும் ஏன் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி விரிவாக அறிய முற்படுவோம்...

Oct 17, 2013

உதிரும் நான் -22

என்றோ வந்தவள்
என் மனவாசலில்
புள்ளி வைத்துச்
சென்றுவிட்டாள்...

நான் இன்னமும்
கோலமிட்டு வண்ணம் தீட்டிக் 
காத்துக்கொண்டிருக்கிறேன்
அவள் வருகைக்காய்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Oct 7, 2013

என்-காதல்

பழகுவதற்கு திருமகளையும்
பழகியபின் உன்னையும்
படைத்து எனெக்கென
அனுப்பிவிட்டான் நான்முகன்...

மோகம் கொண்டவேளையில்
அவன் படைத்துவிட்ட உன்கண்களால்
நித்தமும் வெந்து கொண்டிருக்கிறேனடி
என் காதல் தீயில்...

உன் கெண்டைக் கால் வனப்பில்
துளிர்விட்ட என் காதல்
உன் மார்புப் பள்ளத்தாக்கில்
விழுந்து கிடக்க ஏங்குதடி..

ஒற்றைச் சிரிப்பினில்
சிக்கிக்கொண்ட என் இதயம்,
உன் உதட்டுவரி  பள்ளத்தில்
உருகிக்கொண்டிருக்கும் என்உயிர்...

நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
என்னை கிறுக்கனாய் ஆக்குதடி...
உன்னை காணும்போது மட்டுமே -மீண்டும்
உயிர்பித்துக்கொல்(ள்)கிறேன் என்னை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Oct 1, 2013

நானும் வண்ணத்துப் பூச்சியும்...

அவள் இதழ்களை
மலர் இதழென எண்ணி
தேனெடுக்க அமரவரும்
வண்ணத்துப்பூச்சி.

விட்டு விட்டு
சிமிட்டிக்கொண்டிருக்கும்
கண் இமைகளை
தன் ஜோடியின் இறக்கையென
நினைத்து காதல் பேச
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறது...

நான் மட்டும்தான்
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என 
நினைத்துக்கொண்டிருந்தேன்...

பாவம்...!
வண்ணத்துப்பூச்சிக்கும்
விதிவிலக்கில்லை போலும்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Sep 19, 2013

இருண்ட கால தேடல்: களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்

கடந்த இரு பதிவுகளில் களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் காலம் ஏன் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி பேசியிருந்தோம். இக்காலத்தில்  நடைமுறையில் இருந்ததாக  கூறப்படும் தமிழ் எழுத்து முறை மற்றும் இலக்கிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். 

களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது

Sep 14, 2013

உதிரும் நான் -21

பெருமழைக்குப் பின் 
உயிர் பெற்று எழும் 
சிறு காளானாய்

அவளைக் கண்ட பின்

உயிர்பெற்று விட்ட
என் காதல்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Sep 11, 2013

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

கடந்த பதிவில் (மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்)  களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.

Sep 9, 2013

உதிரும் நான் -20

அவள் கோவிலுக்குச் 
செல்லும்போது மட்டுமே
நிகழும் அதிசயம் அது!

நவகிரகச் சிற்பங்களும்
உயிர்பெற்று- அவளைச் சுற்ற 
ஆரம்பித்து விடுவதேன்?

வெற்றிவேல்...
சளையக்குறிச்சி...




நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். சென்ற வருடம் நான் எழுதிய விநாயகர் எப்படி தமிழகம் வந்தார் என்ற பதிவையும் படித்துவிட்டுச் செல்லுங்கள்... அவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...


புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

Sep 6, 2013

மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்

கடந்த தமிழ் பற்றிய பதிவில் களப்பிரர்கள் பற்றி குறிப்பிட்டுருந்தேன், அதாவது களப்பிரர்களின் காலத்தையே கடந்து வந்தது நம் தாய் மொழி... இந்த நவீன களப்பிரர்களை விரட்டாதா என்ன!!! பிறகு சிலர் இந்த களப்பிரர்கள் பற்றி தெளிவான விளக்கங்களை வேண்டி பின்னூட்டம் அளித்திருந்தனர். எனது தேடலுக்கும், என் பதிவிற்கும் சற்று இடைவெளி விழுந்தது உண்மையே.  மேலும் எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையில் தேடினால் மட்டுமே களப்பிரர்கள் பற்றி நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள இயலும்...

Aug 28, 2013

உதிரும் நான் -19

கவிதையை எந்த 
நடையில்
எழுதினாலும்...

உன் காதல் மொழி போல்
சுவையாய் இல்லையடி
என் காதலி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Aug 23, 2013

உதிரும் நான் -18

திருவிழாக் காலங்களில்
பரபரப்பாக மாறிவிடும்
கோவில் தெரு போல் 
ஆகிவிடுகின்றேன்...

அவளைப்
பார்க்கும் தருணங்களில்
மட்டும்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 20, 2013

உதிரும் நான் -17

வயல் வரப்புகளினூடும்,
காய்ந்துபோன ஓடை
மணலிலும்,
கள்ளிச் செடியின் மேல்
எழுதிய நம் பெயர்
தானடி
என் முதல் கவிதை...

வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி...



Aug 17, 2013

நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!


அனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவாறு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...

Aug 16, 2013

உதிரும் நான் -16

கொசுவத்தை வாரி
இடுப்பில் சொருகி, 
வியர்த்த நெற்றியோடு 
எக்கி எக்கி தான்
எட்டாத மாங்காயைத் 
தொரட்டியால் தட்டுகிறாள்...

ஆனால்,

விழுவது என்னமோ,
நானாகவே இருக்கிறேன்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 14, 2013

உதிரும் நான் -15

நாடே சுதந்திரத்தைக்
கொண்டாடிக்கொண்டு
இருக்கிறது...

ஆனால்
என் மனமோ
அவள் காதல் தேசத்தில்
அடிமைப் பட்டுக் கிடக்கவே
ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறது...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 13, 2013

உதிரும் நான் -14

அவள் தன்
தலையணையை கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருக்கிறாள்...

என் இரவோ
என்னை முழுவதுமாக
கேலி செய்து கொண்டிருக்கிறது...


வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Aug 11, 2013

உதிரும் நான் -13

அவளைப் பற்றி
தினமிரவு நட்சத்திரங்களுடன்
கதைத்துக் கொண்டிருப்பேன்.
என்ன ஆச்சர்யம்!

இப்போதெல்லாம் பகலிலும்
அவள் கதையைக் கேட்க
நட்சத்திரங்கள் தோன்றிவிடுகிறது
என் வானில்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Aug 8, 2013

பிறந்த நாள் கவிதை

வெட்கங் கெட்டவனாய்
வீதியில் திரிந்து கொண்டும்,
ஏதோ நினைப்பில்
சிரித்துக்கொண்டும்
காரணமறியாமல் நான்...

தேய்ந்து வரும் நிலவை
வளர் பிறையோடு எப்படி
ஒப்பீடு செய்ய...

உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை'யாக நான்...

உன்னைப் போலவே தினமும்
பூக்க பன்னிரண்டு வருடம்
தவம் இருக்கும் குறிஞ்சி
மலர்...

உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!

எப்படி சொல்ல முயன்றாலும்
அத்தனைப் பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை எழுத!!!

ஆயினும் விழைகிறேன்.
அன்புத் தோழியான
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள் கூற...

இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்...


அன்போட வெற்றிவேல்...

டிஸ்கி:
அனைவருக்கும் வணக்கம்... இன்று (அதாவது ஆடி 24, வெள்ளிக்கிழமை) எனக்கு பிறந்த நாள். பல வருடம் கழித்து வெள்ளியும் ஆடி 24ம் சேர்ந்து வருது... பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் சந்தோசம். மேல இருக்கற கவிதை எனக்கு நானே எழுதுனது இல்ல, சில மாதங்கள் முன்னாடி நான் எழுதுனது... என்னோட கவிதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு, அப்படியே வாழ்த்திவிட்டு செல்லுவீங்களாம்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Aug 7, 2013

உதிரும் நான் -12

என் உறக்கம், என் இரவு
என அனைத்தையும்
களவாடி விடுகிறாள்...

நான் உறங்கிவிட்டதாய் நினைத்து 

அவள் கொடுக்கும் ஒற்றை 
முத்தத்தில்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Aug 5, 2013

அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்

தேங்காய்ப் பூக்களாய்
உதிரும் அவள்
புன்னகையை
மொத்தமாக 
உண்ணத் துடிக்கும்
நான்...

சிறு சிறு தூறல்களாய்
நெடு நேரம் நனைக்காவிட்டாலும்
கோடை மழையாய் அவளை
சட்டென அணைக்க
ஆசைப்படும் நான்...

அவளைப் பார்த்து
மலரும் தாழம்பூ'வாய் 
தினமும் மலர நினைக்கும்
என் காலை...

அந்தி மாலையில்
கூவும் குயிலுக்குப் பதில்
நான் உரக்கக் கூப்பிட 
நினைக்கும்
அவள் பெயர்...

அவள் கண்ணசைவில் 
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்க்கும்
என் காதல்...

அவள் காதலுக்காகவே 
ஏங்கிக்கொண்டிருக்கும் 
என் உயிர்...

என இன்னும் 
எத்தனையோ, 
அவள் கேட்க மறந்த 
என் காதல் கனவுகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Jul 26, 2013

உதிரும் நான் -11

மழலை  தன் தாயிடமிருந்து
சிறுக சிறுக பேசக்
கற்றுக்கொள்வது போல்

நானும் அவளிடமிருந்து
மெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jul 23, 2013

உதிரும் நான் -10

ஆடி மாதம் மழைக்காக
காத்திருக்கும்
உழுத நிலமாக
காய்ந்து கொண்டிருக்கிறேன்...
அவள் வருகைக்காய்!!!

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 20, 2013

அவள் சென்று விட்ட பிறகு...

சமையலறையில்
சமைத்ததை நானும்
சமைந்ததை அவளும்
சமமாகப் பரிமாறிய நேரங்களில்
சிந்திய பருக்கைகளையும்
சிதறிய முத்தங்களையும்
பசியோடு 
அவள் சென்றுவிட்ட 
ஆடி மாதத்தில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தனியாக நான்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 17, 2013

பலாப் பழம் வாங்க போறீங்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்!

சந்தைல பலாப்பழம் வாங்குவோம், பழம் பெருசா இருக்கும், கடைக் காரரும் நிறைய சுளை இருக்கும்னு சொல்லி வாங்க வச்சிடுவார். நாமளும் வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு பலாப் பழம் விற்ற அந்த பெரியவர திட்டிகிட்டு இருப்போம், ஏமாற்றுக் காரர் என்று. ஏன்னா உள்ள சுளையே இருக்காது, மாட்டுக்கு மட்டும் ஒரே கோதா இருக்கும்.  இந்த பிரச்சனை இனி ஏற்ப்படாம இருக்கனுமா இந்த பதிவை படிங்க. பழத்த வெட்டாமலே உள்ள இருக்கறது எத்தனை சுளை என்று எண்ணிவிடலாம். 

Jul 14, 2013

உதிரும் நான் -9

அவளைக் கண்ட பின்
அறிந்து கொண்டேன்...

கவிஞனைப்
புனையும் வல்லமை
கவிதைக்கும் 
உண்டென்பதை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jul 10, 2013

உதிரும் நான் -8

மரணத்தை வென்றவன்:

உன் வேல்விழி பார்வைகள்
துளைத்தும் 
நான் இன்னும் 
மரணிக்காமல் உள்ளேனே,
மரணத்தை வென்றவன்
நான்தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jul 4, 2013

அவள் -ஆறாவது பெருங்காப்பியம்

உன் பொன் முகத்தில்
எப்போதுமே தவழும் 
புன்னகையை அணியாக்கி...

உதட்டுச் சுழித்தலை மோனையாக்கி
கண் சிமிட்டலை எதுகையாக்கி
பின்வரும் அழகு சிரிப்பை இயைபாக்கி...

உன் வெட்கம்- எனக்கு அந்தாதி
எனைத் தீண்டும் உன் குளிர்ந்த
பார்வையோ மடக்கு என்பேன்...

உன் செவ்வாயில் உதிரும் 
பன்சொற்களை செய்யுளாக்கி...
மனத்திரையில் ஓடும் நம்
காதலைப் பொருளாக்கி...

தமிழ் தனக்காக எழுதிக் 
கொண்டிருக்கும்
ஆறாவது பெருங்காப்பியம்
உன்னை'யும்
நம் காதலையும் தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jul 2, 2013

உதிரும் நான்- 7

ஏனோ நீ
சூடிச் செல்கையில் மட்டும் 
பருத்திப் பூவும்
வாசம் பெற்று என்னை
கிறக்கமடைய
செய்வதேனடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jun 30, 2013

ஏனடி?

நீ சென்ற 
என் காதலை நினைத்து 
ஏங்கித் தவித்து வருந்திய 
என்மனம்- இன்று ஏனோ
மறத்தும் போய்விட்டது...

ஆனால்
கார்மேகத்தினடையே 
தோன்றும் பேரொளியாய்
உன் முகம் மட்டும்
திரும்ப திரும்ப என்மனதில்
தோன்றி
நீர் பெருக்கை பெருக்கச்
செய்வதேனடி?

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 26, 2013

உதிரும் நான் -6

மழையில்லாத 
வறண்ட குளம் மாதிரி 
ஆகிவிட்டது 
என் மனம்...

நீயில்லாமல்
ஏதுமற்றதாய்!!!

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...




Jun 25, 2013

பொய்க்கும் நதிகள்

தன் கரைப் புற்க்களினால் 
தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின் 
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..

தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும் 
பச்சிகள் என் யாவற்றையும் இழந்து...

பாலிதீன் குப்பைகளையும் நகரக் கழிவுகளையும் 
தன்னோடு சுமக்கும் நிலை கண்டு
மனம் வெதும்பி, மழையைப் பொய்த்து 
கருவேல மரங்களாயும் பொட்டல் நிலமாகவும் 
மாறிக்கொண்டிருக்கும் நதிகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 23, 2013

எதிர் கால நினைவுகள் - மீள் பதிவு

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

Jun 19, 2013

காதல் கடிதம்: திடங்கொண்டு போராடு- பரிசுப் போட்டி

அன்புள்ள ராட்சசிக்கு,

பார்க்கும் பார்வையில் மட்டும் என்னுள், என் ஐம்புலனில் தீயை  விதைத்துவிட்டு என்னை தூரமாக தள்ளி வைத்து ஏதும் அறியாதவள் போல் என்னை ரசித்துக் கொண்டிருப்பவளுக்கு நான் எழுதும் என் காதல் கடிதம்...

முதலில் கண்டபோது தென்றலாய் என்னை வருடி, பழகும் காலத்தில் அழகுத் தூறலாக என்னை நனைத்து, என் காதலியாய் என்  மனத்தைப் புயல் போல ஆட்கொண்ட என் பேரழகிக்கு...

நானாக இருந்த என் நாட்களை விட, நாமாக இருந்த என் நாட்களில் என்னுள் பல மாற்றங்களை விதைத்து விட்டுச் சென்றவளுக்கு...

உன்னுடன் காலாற நடந்தபோது வண்ணமயமான என் நிழல், நீயில்லாத என் வெற்று நடையைக் கண்டு என் நிழலும் என்னைக் கேளி பேச வைத்தவளுக்கு...

என் வாழ்வில் நான் மிகவும் கவனமாய் என் இதயக்கூட்டில் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகள், நாம் சந்தித்த பொழுதுகள் தானடி. ஆனால் அந்த இனிய சந்திப்புகள் மட்டும் தான் என்னை இன்னும் உயிரோட்டமாய் வைத்திருக்கிறது.

என் காதல் உனக்குத் தெரியாத நாட்களில் எல்லாம் என்னுடன் அளவாவிய நீ, ஏனோ என் எண்ணத்தைத் தெரிந்துகொண்ட பின் நான் காண இயலாத தூரத்தில் மறைந்துகொண்டு என்னை நித்தமும் வதைத்துக் கொண்டிருப்பவளுக்கு...

என் கனவு மற்றும் என் எண்ணங்கள் என அனைத்தையும் களவாடி என் உறக்கத்தோடு என்னையும் சேர்த்து நீயே என்னையும் களவாடுவாய் என்ற காத்திருப்பில் நானடி...

இப்போது என் மனம் உன்னை நினைத்தே என் உயிர் வேகுவது போல், உன் மடியில் என் உயிர் பிரிந்து, உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும்  இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி என் செல்ல ராட்சசியே!!!

அன்புடன் 
வெற்றிவேல்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இது போட்டிக்காக மட்டுமே எழுதப்பட்டது, எழுதியது அனைத்தும் கற்பனையே. ஆரம்பத்தில் எளிதாக எழுதிவிடலாம் என்று ஒப்புக்கொண்டேன், ஆனால் எழுத ஆரம்பித்த பின்பே அதன் கடினம் புரிந்தது. நல்ல, யாராலும் எளிதில் ஒப்புக்கொள்ள இயலாத தலைப்பைத் தான் நண்பர் சீனு வழங்கியுள்ளார். அவரது முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நண்பர்கள் எழுதுபவர்களை ஊக்குவிக்குமாறு பல போட்டிகளை நடத்த முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

எப்படியோ என்னையும் காதல் கடிதம் ஒருவர் எழுதவைத்துவிட்டார்.... நன்றிகள் பல...

Jun 17, 2013

மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்...


வயிற்றில் இருக்கும் உனக்கு 
அழகுக் கதைகள் கூறி- உன் 
சிறு அசைவுகளையும் காதுவைத்துக்
கேட்டு ரசிக்கும் -என் அக்கா
மகளாய் நீயாக வேண்டும்...

உன் கரம் கோர்த்து ஊர் சுற்றி
ஆளானதும் பச்சை ஒலைக்கட்டி
என் குரலைக் கேட்டதும்- கதவிடுக்கில்
நாணத்துடன் மறைந்திருந்து பார்க்கும்
உன்ஆசை மாமனாக நானாக வேண்டும்...

சோம்பல் முறிக்கும் உன்பேரழகு,
அதிகாலையில் நீயிடும் கோலத்தின்
புள்ளியில் நான் தொலைந்து, உன்சிறு
புன்னகைகளையும் ரசிக்கும்படி உன்
எதிர் வீட்டில் நான் வசிக்க வேண்டும்...

நம் காதலுக்கு நம் பெற்றோரே 
தூபமிட்டு ஆசிவழங்க, உனக்குப்
பிடித்த பையனை முதல் வருடமும்
எனக்குப் பிடித்த பெண்ணை மூன்றாம் 
வருடமும் நாம் பெற வேண்டும்...

திகட்டும் அன்பில் இருவரும் திளைத்து
உன் மடியில் என்உயிர் பிரிந்து, இப்பிறப்பில்
உன்னை நினைத்தே என்உயிர் வேகுவது போல்
உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே- என்
உடல் வேகவேண்டும் என் மறுபிறப்பில்....

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 15, 2013

தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்

தி.மு.க தமிழர்களுக்கு செய்த துரோகம் ஊர் அறிந்ததே, ஆனால் அக்கழகம் 'தமிழ்' தான் உயிர் மூச்சு என அழைத்து அதற்க்கும் பெரும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கின்றனர். ஆம். மாபெரும் துரோகம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமலும் இருந்ததன் விளைவு.

Jun 14, 2013

உதிரும் நான் -5


மெழுகு தன்னை 
உருக்கி 
ஒளியூட்டுவது போல்

என்னை உருக்கி
உன்னைக் 
காதலிக்கும் 
என் மனம்...

-------வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...


Jun 11, 2013

உதிரும் நான் -4


நத்தை
 தன் முதுகில் 
சுமந்து செல்லும்
நீர்க்குடம் போலத்தானடி
என் காதல்...

என் சுமையும்
அதுதான்...
என்னை உயிர்ப்பிப்பதும்
அதுதான்-


-------வெற்றிவேல்...
  சாளையக்குறிச்சி...



Jun 9, 2013

உதிரும் நான் -3


உன் கைகோர்த்து
செல்லும்போது 
மட்டும்
என்  நிழலும்
வண்ணமாகி 
விடுவதேன்...

 -------வெற்றிவேல்,
  -சாளையக்குறிச்சி.




Jun 6, 2013

ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் கோயம்புத்தூர் சென்ற போது என்னைப்பார்த்து ஒரு CISF வீரர் கேட்ட கேள்வி இது தான்...

ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா? என்று.

ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே நான் ஒரு ஹிந்துஸ்தானி என்றால், எங்களுக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவை இல்லை. நான் தமிழன் என்பதிலேயே பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினேன்...

Jun 5, 2013

உதிரும் நான் -2


என் தோட்டமெங்கும் 
வண்ண வண்ண பூச்செடிகள்...ஆனால்

அது பூத்துக் குலுங்குவதெல்லாம்
உன்னையும் 
உன் புன்னகையையும் 
தானடி...

-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.


May 31, 2013

உதிரும் நான்- 1


என்னைப் போலவே, என்
கவிதையும் நீ(உயிர்)யின்றி
வாடுதடி...

ஒரு முறையேனும் வாசித்து- 
உயிர் கொடுத்துச் 
செல்லேன்...



-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.



May 28, 2013

மியூசியத்தில் சுட்ட படங்கள்:

நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே! நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.

May 8, 2013

கவிதைத் துளிகள்


கவிதை எதற்கு :

எண்ணமும் எழுத்தும் 

நீயென்றானபின் – இனி 

கவிதைகள் எதற்கு, 

கதைகள் எதற்கு- நீ 

ஒருத்தி மட்டும் 

போதுமே!




பெளதீக விதி:

என் மனம் வான் முகிலாய்

பறக்கவும் செய்கிறது...

குளிர் மழையாய் விழவும்

செய்கிறது- யாவும் உன்னால்.



இதற்க்கு நியூட்டனின் பெளதீக

விதியில் விளக்கம் ஏதேனும்

உண்டா?

சொல்லேன்...





Apr 28, 2013

விட்டில் பூச்சியல்லடி நான்



உன் கோபக் கனலில் அருகில்
வந்தவுடன் எரித்துவிடும்
விட்டில் பூச்சியென்று
நினைத்தாயா என்னை!

நான் தேடிச் செல்வது –சிறு
வெளிச்சமும் அல்ல. நீ
எரித்தவுடன் சாம்பலாக
விட்டில் பூச்சியுமல்ல நான்.
பீனிக்ஸ் பறவையடி...

சுடும் சூரியன் எனத் தெரிந்தும்
உன்னை நோக்கியே
பறந்துகொண்டிருப்பேன்- உன்னாலே
நித்தமும்
மடிவதற்க்காய்!!!

................................வெற்றிவேல்...

Apr 26, 2013

காதல் துளிகள்





என் கனவு:

என் கனவின் தொடக்கம்

எதுவாகினும்- அது

ஏனோ சேருமிடம் மட்டும்

நீயாகிறாய்...



முரண்பாடு:

எத்தனை முறைதான் உன்னை

எழுத முற்ப்பட்டாலும்- மை

தீர்ந்து, சொல் காணாமல்

போய்விடுகிறது.



உன்னைப் பற்றிதான் எழுத

முடிகிறதே தவிற- உன்னை

எழுதிய பாடில்லை...!



என் தோஷம்:


என்  மனம்


உன்னை நினைக்கும்

போதெல்லாம்

பித்துப் பிடிக்கிறதே!


இதன் பெயர் தான்

கன்னி தோஷமோ!



மாற்றம்: 

புறமெங்கும் அனல் வெயிலாய்

புழுதிக் காற்று பறக்க...


அங்கமெங்கும் குளிர் காற்றாய்

புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்

யாவும் உன்னால் தானே!



இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!

பார்க்கும் பார்வையில் மட்டும்

என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து

செல்லும் பெண்ணே!!!


இன்னும் என்னை என்னவெல்லாம்

செய்வதாய் உத்தேசம்...

                                  -வெற்றிவேல்