Dec 30, 2015

திறந்த மடல் - 1

அன்பு தோழர் சீனு அவர்களுக்கு,

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, அப்பா சென்னையில் இருக்கும்போது அவர் மாதாமாதம் வீட்டிற்கு கடிதம் எழுதுவார். அதை நான்தான் வாசித்துக்காட்டுவேன். அப்போதெல்லாம் நான் சிறு பையன். அப்பா எழுதும் கடிதத்தை என்னால் வாசிக்க மட்டும் முடியும். பதில் எழுத தெரியாது. மாமா தான் பதில் எழுதுவார். நான் பதில் எழுதுகிறேன் என்று கூறிக்கொண்டு எழுதினாலும் அதில் ஊறுபட்ட பிழை மண்டிக்கிடக்கும். மாமா அதைக் கிழித்துவிட்டு அவர்தான் எழுதி அனுப்புவார். இருந்தாலும் எனக்குள் கடிதம் எழுத வேண்டும் எனும் ஆவல் மட்டும் நீடித்துக்கொண்டே இருந்தது.


Dec 1, 2015

தாவணி

வழக்கமாகப் புலரும் பொழுதைப் போன்று அன்று இல்லை. காலையில் எழும்போதே பெரும் உற்சாகமாக எழுந்தேன். காலையிலேயே துயில் களைந்து எழுந்துவிட்ட என்னை என் தம்பியும், அம்மாவும் விசித்திரமாக பார்த்தார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விடுமுறைக்கு வீட்டிற்கு எப்போது வந்தாலும் அப்போதெல்லாம் ஒன்பது மணிக்கு எழுந்தே பழக்கப்பட்டவன் நான். என்னை எழுப்ப முயற்சித்துவிட்டு தம்பி தோற்று பள்ளிக்கூடம் சென்றுவிடுவான். அம்மா பருத்திக்காட்டுக்கு சென்றுவிடுவார். அவர்கள் பிறகே விழிப்பேன். கல்லூரியில் சேர்ந்த மூன்று வருடங்களாக நடந்துகொண்டிருப்பது இதுதான். நேற்று தீபாவளி. நேற்று கூட எட்டு மணிக்குத்தான் எழுந்தேன். அப்படிப்பட்ட சோம்பேறி நான்.

Sep 1, 2015

உதிரும் நான் -37

ரேடாரிலும் அகப்படாமல் எங்கோ
தொலைந்துபோனது மனம்...

சோனார் அலைகளிலும் சிக்காமல் 

புதைந்துபோனது எங்கோ???

உன்னுள் தொலைந்துபோயிருந்தால்
திருப்பிக் கொடுத்துவிடடி

மீட்டுக் கொள்கிறேன் என்னை!


 சி.வெற்றிவேல்...
 சாளையக்குறிச்சி...

Aug 1, 2015

பாகுபலி - இயக்குனர் திரு.ராஜமௌலி'யிடம் சில கேள்விகள்???

Baahubali poster.jpgஇயக்குனர் திரு.ராஜமௌலிக்கு அன்பான வணக்கம்.
  
நான் ஈ வெற்றிப் படத்திற்குப் பிறகு பாகுபலி எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். திரைப்படத்தின் தொடக்கத்தில் சிவகாமி தேவியாரின் தியாகம், சிவா லிங்கத்தைத் தூக்கிக்கொண்டு நீர் வீழ்ச்சியில் வைத்த காட்சி, கட்டப்பர் சிவாவைக் கொலை செய்ய ஈட்டியை எடுத்துக்கொண்டு ஓடி செல்லும்போது திடீரென்று திரும்பும் சிவாவைப் பார்த்து பாகுபலி என எண்ணி அவனது காலினைத் தனது தலைமேல் வைக்கும் காட்சிகள் உடலைச் சிலிர்க்கவைத்தன. தேவசேனா சுள்ளிகளைப் பொறுக்கும் போது கட்டப்பா அவளிடம், தாயே, "நான் உங்களை விடுவிக்கப் பாடுபடுகிறேன். தாங்கள் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்று தட்டிவிடும்போது ஆக்ரோசமான தேவசேனாவின் வசனங்கள் அருமை.

Feb 15, 2015

உதிரும் நான் - 36

ஒற்றை மரக்கள்ளின் 
போதையை 
கண நேரத்தில் ஊட்டிவிடுகிறாள்...

பின்னாலிருந்து அழைக்கும் 
குழந்தையைப் பார்க்கும்
தருணங்களில்
திருட்டுத்தனமாக எனை நோக்கும்போது!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 10, 2015

உதிரும் நான் - 35

பெரும் மழையினூடே
இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமென
எரிந்துகொண்டிருக்கிறது மனம்...

எனக்குள் 

சுழன்றுகொண்டிருக்கும்
அவளது நினைவலைகளால்!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 2, 2015

கவிதை: காதலியை வெறுக்கிறேன்...

நான்தான் முதலில் நோக்கினேன்
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்
பிறிதொரு சமயம் அவளும் நோக்கினாள்
பார்வை காதலானது
காதல் தெய்வீகமானது

அவள் விழிகளைப் பார்த்தே
காலத்தைக் கடக்கும் வித்தையறிந்தேன்.

உதட்டுப் பிளவினூடே
உயிரை உறிஞ்சினாள்...
அமரத்துவத்தை உணர்ந்தேன் நான்.

ஓருயிர் ஈருடலானோம்.

பிறவிப்பலனை அவள்மூலம்
அடைந்தேன்.

அவளின்றி நானில்லை
எனும் நித்திய நிலை.

அவளது புன்னகையைக் கொண்டே 
யுகங்களைக் கடக்க 
முனைந்தேன்...

காலம் கடந்தது.

மனம் இப்போதெல்லாம்
என் காதலியை 
வெறுக்கவே செய்கிறது.

காரணம் தெரியவில்லை.

ஒருவேளை
காதலி மனைவியானதும்கூட
காரணமாக இருக்கலாம்...

அவள் காதலியாகவே 
இருந்திருக்கலாம்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jan 31, 2015

அரிச்சல் முனை தேவதை

மதுரை வலைப் பதிவர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிறகு கடற்கரை விஜயன் துரையுடனே ராமேஸ்வரத்திற்கு கிளம்பிவிட்டிருந்தேன். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பொது அம்மா கூறிய “அவுங்க கூப்டறாங்க, இவுங்க கூப்டராங்கன்னு ஊர் சுத்த கிளம்பிடாத. மதுரை போனதும் வீட்டுக்கு வந்துடனும்” என்ற வார்த்தைகள் என் காதுகளில் ஒலிக்க வெற்றுச் சிரிப்பு ஒன்று உதிர்ந்துவிட்டுச் சென்றது என் முகத்தில்.

அதைப்பார்த்த கடற்கரை துரை, “என்னடா நமக்கு பக்கத்துல உக்காந்துருக்க பொண்ணப் பார்த்து சிரிக்கிறியா?” என கலாய்க்க அதற்கும் வெற்றுச் சிரிப்பு ஒன்றையே பதிலாய் உதிர்த்தேன்.

Jan 20, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் மூன்று மணி நேரம்...

வானவல்லி எழுதிய பிறகு எடிட்டர் சுந்தர் அண்ணன், "வெற்றி வானவல்லிய புத்தகக் காட்சிக்கு வெளியிடலாம்னு வானதி'ல சொல்லிட்டாங்க"ன்னு சொல்லும் வரை சென்னையில் புத்தகக் காட்சி என்ற ஒன்று நடக்கும் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன் எந்தவொரு புத்தகக் காட்சிக்கும் நான் சென்றது இல்லை. எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. வாசிக்க வேண்டும் எனும் ஆவல் மிகுந்தால் அம்மா துணி எடுத்துக்கண்ணு கொடுக்கற முன்னூறு, நானூறு ரூபாய எடுத்துகிட்டு பக்கத்துல இருக்கற புத்தகக் கடைக்குப் போயிடுவேன். அங்கப் போயும் எனக்கு புத்தகங்கள வாங்கத் தெரியாது.