May 31, 2013

உதிரும் நான்- 1


என்னைப் போலவே, என்
கவிதையும் நீ(உயிர்)யின்றி
வாடுதடி...

ஒரு முறையேனும் வாசித்து- 
உயிர் கொடுத்துச் 
செல்லேன்...



-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.



May 28, 2013

மியூசியத்தில் சுட்ட படங்கள்:

நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே! நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.

May 8, 2013

கவிதைத் துளிகள்


கவிதை எதற்கு :

எண்ணமும் எழுத்தும் 

நீயென்றானபின் – இனி 

கவிதைகள் எதற்கு, 

கதைகள் எதற்கு- நீ 

ஒருத்தி மட்டும் 

போதுமே!




பெளதீக விதி:

என் மனம் வான் முகிலாய்

பறக்கவும் செய்கிறது...

குளிர் மழையாய் விழவும்

செய்கிறது- யாவும் உன்னால்.



இதற்க்கு நியூட்டனின் பெளதீக

விதியில் விளக்கம் ஏதேனும்

உண்டா?

சொல்லேன்...