Jul 3, 2016

மூன்றாவது காதல்

ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்தபடியே அலைகள் பாதத்தைத் தொடாதபடி சற்றுத் தள்ளி நுரை பொங்கிய கடலலைகளையே பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் சுதன்.

அப்போது அவனுக்குப் பின்னால் தொலைவிலிருந்து எழுந்த, “சுதா....” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.

May 25, 2016

வெற்றி கண்ட ஒரு வரலாற்றுப் புதினம்!!


நம் கண் முன்னாலேயே பல நாட்களாக அமைதியாக அமர்ந்திருக்கும் நம் வீட்டு பூச்செடியொன்று திடீரென ஒரு நாளில் மொட்டு விட்டு, மலர்ந்து.. மலராகி...  முதல் பூ பூக்கும் தருணத்தில் மனதில் ஒரு ஆனந்தம் ஏற்படுமே , அப்படி  இருந்தது . வெற்றியின் புத்தகம் அச்சிற்கு சென்ற அந்த தருணத்தில்.


வானவல்லி கரிகாலச்சோழனின் வாழ்க்கையை மையச்சரடாக கொண்டு பின்னப்பட்ட ஒரு வரலாற்று புதினம்.  நான்கு பாகங்களை கொண்ட இந்த பெருங்காவியம்.  வானதி பதிப்பகத்தின் புதிய வெளியீடாக இந்த வருட புத்தகத் திருவிழாவை அலங்கரிக்க இருக்கிறது.

பாகம் -1

வானவல்லி  யின் வெற்றிக்கு மூல முதற் காரணம் ஒன்றே ஒன்று தான் அயராத அதி தீவிர அர்ப்பணிப்புடன்  அவனிட்ட (இந்த நூலின் ஆசிரியனும் என் நன்பனுமான வெற்றிவேலிட்ட )அசாத்திய உழைப்பு.

வானவல்லியை அவன் எழுத துவங்கியிருந்த காலம் துவங்கி , வானவல்லி அவனது நினைப்பையும் , எழுத்தையும் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்திருக்க வேண்டும் , எப்போது பேசினாலும்  வானவல்லி பற்றியே பேசுவான், சின்ன இடைவெளி கிடைத்தால் போதும்  கம்ப்யூட்டர் திரையை வெறித்தபடி வெறித்தனமாக டைப் செய்ய ஆரம்பித்துவிடுவான்.

ஊர் சுற்றிப்பார்க்க நன்பர் வீட்டிற்கு சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் !, அவன் அங்கு கிடைக்கும்  சமயத்தின் ஓய்வு நேரத்தில் கூட வானவல்லியைத்தான் எழுதிக்கொண்டிருப்பான் .

எத்தனை அதீத உழைப்பு !

உழைப்பின் அதீதம் எத்தனை ருசிகரமானது என்பதை அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அறிவார்கள். வானவல்லி புத்தகமாக வேண்டும் என்கிற அவனது பெருங்கனவு  அவனது பற்பல இரவுகளின் உறக்கங்களை உணவாக்கி செரித்திரிக்கிறது.

ஆரம்ப நாட்களில் அவ்வப்போது அத்தியாயங்களை எழுதி முடித்த கையோடு அனுப்பிவைத்து அபிப்ராயம் கேட்பான். நானும் கத்துக்குட்டித்தனமாக எனக்குத்தெரிந்த ஏதாவதொன்றை சொல்லி வைப்பேன். கதையைப் பற்றி மணிக்கணக்கில் அலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பான்.

வெற்றிவேலின் கதை சொல்லல்களில் அலங்கார சொல் வரிசைகள் அதிகம் இருக்காது, அவனது எழுத்தின் சிறப்பு : நேருக்கு நேரான வார்த்தைகள், விளக்கமான காட்சி விவரிப்பு . வாசிக்கும்போதே வார்த்தைகள் உருவம் கொண்டு விடும்.

முதல் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் முதல் காட்சியிலேயே இதை உணர முடியும். சம்பாபதி வனம் கடந்து பத்திரை ஊருக்குள் நுழைகிறாள், வழிபறிக்காரர்கள் வழிமறித்து களவாட வருகிறார்கள். பயம் பீடித்த பதறிப்போயிருக்கும் பத்திரையை காக்க யாராவது வருவார்களா ! என படிக்கும் நாம் பதறும் போது நமது , கதையின் கதாநாயகி வானவல்லியின் Entry !.


கதாப்பாத்திரங்களும்,  கதைக்களமுமே ஒரு கதைக்கான முக்கிய அம்சங்கள் , கதையின் வெற்றி தோல்விகளை இந்த இரண்டும்  தான்  அநேகமாக தீர்மாணிக்கின்றன. வானவல்லிக்கு இந்த இரண்டும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றது. இந்த கதையின் முக்கிய சிறப்பாம்சம் அதன் கதாப்பாத்திரங்கள், கதாப்பாத்திரங்கள் அத்தனை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கதையின் ஒரு இடத்தில் விறல்வேலின் மாமன் மகள் பூங்கோதை இறந்துபோகிறாள்,  அந்த காட்சியை  கடந்தபோது உண்மையிலேயே மிக வருத்தமாக இருந்தது , அவள் இறந்த போது மனம் என்னவோபோல இருந்தது.,  அவளை கொலை செய்ததற்காக வெற்றிவேலை திட்டலாம் போலிருந்தது, ஆனால் அவளது மரணம் கதைக்கு மிக அவசியமான ஒன்று, கதையின் போக்கை தீர்மாணிக்கிற ஒன்று.,

ஒரு கதாசிரியன் தனது கதாப்பாத்திரங்கள் கதையினுள் மரணிக்கிறபோது வருத்தப்படுகிறான் என்கிற கருத்தை பாலுமகேந்திரா தனது  ஜூலிகணபதி திரைப்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்.

கதாசிரியன் அவனாக விரும்பி அந்த கதாப்பாத்திரத்தை கொலை செய்யவில்லை, கதையின் போக்கு அவனை அதை செய்ய வைத்திருக்கிறது, பூங்கோதையின் மரணம் என்னை மட்டுமின்றி வெற்றிவேலையும் கூட பாதித்திருந்தது !  என்ன செய்ய கதைக்கு அது அவசியம் !

வானவல்லியை வாசிப்பவர்கள் அதன் கதைக்களத்தை, கதாப்பாத்த்திரங்களை, கதையை நிச்சயம் சிலாகிப்பார்கள், வாசகர்களிடையே வானவல்லி உரிய அங்கீகாரம் பெறும் என உறுதியாக கூறவேன் நான்.


முதல் பாகத்தில் கதை நாயகன் விறல்வேல், வானவல்லியிடம் அவனது காதலை தாழம்பூவில் கவிதையாக்கி சொல்லும் அந்த தருணம் ! எனக்கு மிக பிடித்திருந்தது,

அவர்களிடையே காதல் மலரும்  நிமிடங்கள், அவர்களிடையேயான சிறு சிறு ஊடல்கள், சந்தர்ப்ப வசத்தால் ஏற்படும் பிரிவுகள், போன்ற உணர்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறான் , சங்க இலக்கியங்களின் வாசனையை அனுபவித்து  காட்சிப்படுத்தியிருக்கிறான் .

ஆங்காங்கே , இந்த கதை முழுக்க அவன் பயன்படுத்தியிருக்கும் உவமைகளும் மிக ரசனையானவை. "விடியலுக்காக இரவானது நட்சத்திரங்களுடன் தன்னையும் சாகடித்துக் கொள்வதில்லையா ! அதுபோலவே இருந்துவிட்டுப்போகிறேன் நானும் " என விறல்வேல் கூறும்போது  நான் ஆச்சர்யத்துப்போனேன் !.


வானவல்லி பெருங்காவியம் வரலாற்று புதினப் பிரியர்களுக்கு மட்டுமின்றி இலக்கிய ரசனைக்காரர்களுக்கும் கூட நிச்சயம் விருந்தாக அமையும்.

காதல் காட்சிகளில் நம்மை கரைய வைக்கின்றன என்றால்,   போர்க்காட்சிகள் நம்மை  உறைய வைக்கின்றன , அத்தனை விறுவிறுப்பாக சண்டைக்காட்சிகள் நகர்கின்றன.
பாகம் 2


இரண்டாம் புத்தகத்தில் கடலுக்குள், கப்பல்களுக்குள் நடக்கும் போர் பற்றி எழுதியிருப்பான் ,  Brilliant !! . ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போல இருந்தது.அத்தனை நேர்த்தியான காட்சியமைப்புகள்.
பாகம் 3



நான்காம் பாகம் இதுவரை எந்த வரலாற்றுப் புதின ஆசிரியரும் தொடாத புதிய களமான கரிகாலனின் இமய படையெடுப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.
பாகம் 4
வானவல்லி புதினத்திற்கு திரைக்கதை வடிவம் கொடுத்து பிரம்மாண்ட வடிவில் படமாக எடுத்தால் நிச்சயம் அமோக வெற்றி பெரும் என நம்புகிறேன் !.
வெற்றிவேல் , அவன் பெயரிலேயே வெற்றியை பொதித்து வைத்திருக்கிறான்.வெற்றி என்ற வார்த்தையை அவன் காதுகள், ஒலியை மொழியாக்கி புரிந்து கொள்ளத்துவங்கிய நாள் முதலாகவே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

இன்னும் பல வெற்றிகள் உன்னைத் தேடி வரும். உன்னை நட்பென கொண்டதில் பெரும் சந்தோசம் கொள்கிறேன் !

 உன்னதமானவர்களின் உன்னத கனவுகள் உண்மையாகும் என்ற கலாமின் வரிகளை உனக்கு மறுபடியும் நினைவுருத்துகிறேன் ! .

சர்வ நிச்சயமாக , வானவல்லி வரலாற்றுப் புதின வரலாற்றில் ஒரு வரலாறு படைக்கும்.
நன்றி :

May 20, 2016

வானவல்லி – சரித்திரப் புதினம்: முன்னோட்டம்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பருத்திக் காட்டிற்கு குரங்குக் கூட்டம் வந்துவிட்டது. காலையில் பொழுது விடிவதற்கு முன்பு காட்டிற்கு சென்றால் இருட்டியதும் தான் வீட்டிற்கு திரும்புவேன். சாப்பாடு தேடி வந்துவிடும். குரங்குகளை ஓட்டிவிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் தனிமை என்னைப் பீடித்துக் கொள்ளும்.

தனிமைப் படுத்தப்படும் சமயத்தில் தான் மனதின் ஆழத்தினுள் பூட்டி வைத்திருக்கும் பல நினைவுகளும் கிளர்ந்து எழுந்து பாடுபடுத்தும். அந்தத் தனிமையை இப்போது நினைத்தாலும் என்னை நினைத்து நானே பரிதாபப் படுவேன். அந்த அளவிற்குக் கொடூரமான தனிமை அது. வேலை கிடைக்காத விரக்தி, கடன், ஏமாற்றம், காதல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ரணமாக்கத் தொடங்க அவற்றிலிருந்து விடுபட்டுக் கொள்ளவே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.

Mar 7, 2016

வானவல்லி - புத்தக வெளியீடு

நன்பர்களுக்கு வணக்கம்,

வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.

நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...

Feb 26, 2016

கடிதம் - 2: நண்பன் கடற்கரை விஜயனுக்கு...

நண்பன் கடற்கரை விஜயனுக்கு,

வணக்கம்...

மன்னித்துக்கொள் கடல். நேற்று உன்னுடன் பேசும்வரை நீ அனுப்பிய கடிதம் பற்றி நான் மறந்தே போனேன். நீ பேசிய பிறகுதான் உனக்கு பதில் எழுத வேண்டும் என்ற நினைப்பே எனக்கு வந்து சென்றது. ஒரு மாதத்திற்கு முன் நான் எழுதிய கடிதத்தின் சில வரிகளை நீ மணப்பாடமாக தெரிவித்தாய். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன் நீ எழுதிய உனது கடிதத்தில் சில வரிகளைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொண்டு உன்னுடன் கடிதம் பற்றி விவாதிக்க முடியவில்லை. நீ மனதில் என்னவெல்லாம் நினைத்து வருந்தியிருப்பாய் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது. பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன் கடல்.

Feb 13, 2016

பேரன்புள்ள காதலிகளுக்கு...

பேரன்புள்ள காதலிகளுக்கு,

வெற்றிவேல், அந்தக் கடிதத்தை நீ அப்படித் தொடங்கியிருக்கக் கூடாது. அதை வன்மையாக ஆட்சேபனை செய்கிறேன் நான். நீ இப்போதிருக்கும் தருணத்தில்

“உச்சி வானில்

மேகங்களுக்கிடையில் நீந்திக்கொண்டிருக்கும் நிலா

கீழே விழப்போகிறது...

மேற்கு வானம் எரிந்துகொண்டிருக்கிறது.

இதே போன்றதொரு மாலைப் பொழுதில்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்...

ஆனால்,

அவள் இப்போது என்னுடன் இல்லை” என்பன போன்ற துயர் மிகு வரிகளை எழுதுவாய் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நீயோ இந்த முன்னிரவில் உனது காதலிக்கு மன்னிக்கவும் உனது காதலிகளுக்கு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறாய். வர வர உனது போக்கினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. துயரத்துடன் இருக்க வேண்டிய சமயத்தில் “உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்” என்று கவிதை எழுதுகிறாய்.

Jan 26, 2016

மோகப் புயல்

என் உள்ளக்கிடங்கினுள்
மறைத்து வைத்திருக்கும் காதலெல்லாம்
மோகத்தீயாய் என்னுள்
சுடர்விடத் தொடங்கிவிட்டது...

காதல் மழையில் நனைந்துகொண்டிருந்த என்னை
உணர்சிகளால் ஆன
நரம்புகளுக்கிடையில் புறப்பட்ட
மோகப் புயல் சூழ்ந்து
சூறையாடுவதேனடி...

ஒளியினைப் பற்றிக்கொண்ட
நிலவினைப் போல
என் உயிரும் உனைப்பற்றிக்கொள்ள
துடித்துக்கொண்டிருக்கிறது...

என் மோகத்தீயை
நீயும் உணர்ந்தால்,
என்னை அணைத்துக்கொள்...

தோட்டாவைப்போல் உன் பார்வை
என்னைத் துளைக்கட்டும்...
வாளினைப் போல என்னைக்
கிழித்தெறியட்டும்...
இதழ்களால் எனை
இதமாகத் தீண்டு...
முத்தத்தினால் எனை
மூழ்கடிக்கச் செய்...
உடல் சிவந்து கண்ணும் அளவிற்கு கடி...
தீண்டலினால் எனை
கொழுந்துவிட்டெரியச் செய்...

உன்னைத் தீண்ட
உன்னை நேசிக்க
உன்னை அணைக்க
உனக்காகவே நான் பிறந்திருப்பதைப் போல
எனக்காகவே நீயும் பிறந்திருக்கிறாய் எனில்
உன்னிடம் இருப்பவையனைத்தையும்
பாரபட்சமின்றி
எனக்காகக் கொடுத்துவிடு...

அஸ்தமனத் தொடுவானில்
மறைந்துபோகும் வெளிச்சத்தைப் போல
நானும் கரைந்துவிடுகிறேன்
உன் மார்புகளுக்கிடையில்...

சி.வெற்றிவேல்.
சாளையக்குறிச்சி...

Jan 22, 2016

திறந்த மடல் - 2: கடிதங்களின் சுவாரஸ்யங்கள்

அன்புள்ள தோழர் சீனு அவர்களுக்கு,

வணக்கம்...

நான் நலமாகவே இருக்கிறேன். தாங்களும் நலமாக இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையில் கடிதத்தைத் தொடர்கிறேன்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பே எழுத நினைத்த கடிதம் இது. கடந்த வருடம் எழுதிய எனது முதல் கடிதம் சென்னை வெள்ளத்தில் சிக்கி சிதைந்ததைப் போல அல்லாமல், இந்தக் கடிதத்தைக் காப்பாற்றவே சற்றுப் பொறுத்து பொங்கல் களிப்பு அடங்கியபிறகு எழுதுகிறேன்.

Jan 19, 2016

உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்


என் தேடல்
உனக்காகத்தான்...
என் பயணம்
உனக்காகத்தான்...
என் இலக்கும்
உனக்காகத்தான்...

யுகம் யுகங்களாக இறந்து
மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டிருக்கிறேன்
உனக்காக...

இருவரும் சந்திக்கும்போது
காதல் மொழி வேண்டாம்...
விழிகள் இணைந்து
நேரத்தைக் கடக்க வேண்டாம்..
உதட்டோரம் சிறு சிரிப்பு,
கடைக்கண் பார்வை என
எதுவும் தேவையில்லை...

பெருஞ்சிந்தனையில் பேனாவைக் கடிக்கும்
சமயத்திலோ...
உறக்கம் வராமல் புரண்டு படுக்கும்
பொழுதிலோ – அல்லது
தனிமையை விரும்பி
அமர்ந்திருக்கும் காலத்திலோ
என் நினைப்பு உன்னுள் தோன்றி
மறைந்தால் போதும்...

உனக்கும் சேர்த்து
நான் ஒருவன் காதல் செய்வேன்...


சி.வெற்றிவேல்...

சாளையக்குறிச்சி

Jan 17, 2016

பயணங்கள் முடிவதில்லை...

தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அக்கா'வின் பயணம் குறித்த கேள்விகளுக்கு பதில்கள்...
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
இரயில் பயணம் என்றாலே ஏனோ எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. பெரும்பாலும் இரயில் பயணங்களை தவிர்த்து பேருந்தில் தான் பயணம் செய்வேன். இரயிலில் பயணம் செய்வது பேரின்பம் தான். ஆனால், சிக்னல்களில் நிற்கும் சில நிமிடங்கள் எனக்கு பல மணி நேரங்களாக நீண்டு என்னை வதைப்பதுண்டு. எனக்கு எப்போதுமே காத்திருக்கப் பிடிக்காது. குறிப்பாக இரயில் மற்றும் பேருந்திற்காக. ஓரிடத்தில் நிற்காமல் எப்போதுமே நகர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இந்த வகையில் தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே இரயில் பயணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு நினைவில் தெரிந்த முதல் இரயில் பயணம் கல்லூரி காலத்தில்  பள்ளித் தோழியுடன் திருச்சியிலிருந்து அரியலூர் வந்த பயணம் தான். அதிலும் தோழியின் தம்பியும் உடன் வந்ததாலோ  என்னமோ அந்தப் பயணம் பெரிய அளவில் குதூகலத்தை ஏற்படுத்தவில்லை.

Jan 8, 2016

பெற்றோர்களுக்காக...

நெடுநாட்களாகவே எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பது. தெய்வலோகத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் தேவதைகளும், தேவர்களும் வழி தவறி பூமியில் பிறந்த குழந்தைகளைத் தான் நாம் ‘ஆட்டிசம்’ அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்கிறோமோ என்ற எண்ண மயக்கம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. ஏனெனில், வானுலக தேவர்களும், தேவதைகளும் எந்தவித கவலைகளும் இல்லாமல் மற்றவர் துன்பத்தில் மகிழாமல் நிறைவுடன் இருப்பார்கள் என்று நிறைய கதைகளில் கேட்டிருக்கிறேன். அவர்களைப் போன்றவர்களே இந்தக் குழந்தைகளும் என்பது என் எண்ணம். ஏனெனில், இக்குழந்தைகள் எந்தவித கவலைகளும் இல்லாமல், இந்த அவசர இயந்திர உலகில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கென்று ஒரு தனி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அங்கு வருத்தம் என்பதே கிடையாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது பற்றியும் கவலைப்பட வேண்டியதும் இல்லை.