மதுரை வலைப் பதிவர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிறகு கடற்கரை விஜயன் துரையுடனே ராமேஸ்வரத்திற்கு கிளம்பிவிட்டிருந்தேன். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பொது அம்மா கூறிய “அவுங்க கூப்டறாங்க, இவுங்க கூப்டராங்கன்னு ஊர் சுத்த கிளம்பிடாத. மதுரை போனதும் வீட்டுக்கு வந்துடனும்” என்ற வார்த்தைகள் என் காதுகளில் ஒலிக்க வெற்றுச் சிரிப்பு ஒன்று உதிர்ந்துவிட்டுச் சென்றது என் முகத்தில்.
அதைப்பார்த்த கடற்கரை துரை, “என்னடா நமக்கு பக்கத்துல உக்காந்துருக்க பொண்ணப் பார்த்து சிரிக்கிறியா?” என கலாய்க்க அதற்கும் வெற்றுச் சிரிப்பு ஒன்றையே பதிலாய் உதிர்த்தேன்.
அதைப்பார்த்த கடற்கரை துரை, “என்னடா நமக்கு பக்கத்துல உக்காந்துருக்க பொண்ணப் பார்த்து சிரிக்கிறியா?” என கலாய்க்க அதற்கும் வெற்றுச் சிரிப்பு ஒன்றையே பதிலாய் உதிர்த்தேன்.