Jan 31, 2015

அரிச்சல் முனை தேவதை

மதுரை வலைப் பதிவர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிறகு கடற்கரை விஜயன் துரையுடனே ராமேஸ்வரத்திற்கு கிளம்பிவிட்டிருந்தேன். பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பொது அம்மா கூறிய “அவுங்க கூப்டறாங்க, இவுங்க கூப்டராங்கன்னு ஊர் சுத்த கிளம்பிடாத. மதுரை போனதும் வீட்டுக்கு வந்துடனும்” என்ற வார்த்தைகள் என் காதுகளில் ஒலிக்க வெற்றுச் சிரிப்பு ஒன்று உதிர்ந்துவிட்டுச் சென்றது என் முகத்தில்.

அதைப்பார்த்த கடற்கரை துரை, “என்னடா நமக்கு பக்கத்துல உக்காந்துருக்க பொண்ணப் பார்த்து சிரிக்கிறியா?” என கலாய்க்க அதற்கும் வெற்றுச் சிரிப்பு ஒன்றையே பதிலாய் உதிர்த்தேன்.

Jan 20, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் மூன்று மணி நேரம்...

வானவல்லி எழுதிய பிறகு எடிட்டர் சுந்தர் அண்ணன், "வெற்றி வானவல்லிய புத்தகக் காட்சிக்கு வெளியிடலாம்னு வானதி'ல சொல்லிட்டாங்க"ன்னு சொல்லும் வரை சென்னையில் புத்தகக் காட்சி என்ற ஒன்று நடக்கும் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன் எந்தவொரு புத்தகக் காட்சிக்கும் நான் சென்றது இல்லை. எனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது. வாசிக்க வேண்டும் எனும் ஆவல் மிகுந்தால் அம்மா துணி எடுத்துக்கண்ணு கொடுக்கற முன்னூறு, நானூறு ரூபாய எடுத்துகிட்டு பக்கத்துல இருக்கற புத்தகக் கடைக்குப் போயிடுவேன். அங்கப் போயும் எனக்கு புத்தகங்கள வாங்கத் தெரியாது.