Mar 21, 2014

உதிரும் நான் -32

முதலில்
அவளது சிறுசிறு
அத்துமீறல்களைத் தான்
அனுமதித்தேன் என்னுள்...

பின்னர் சர்வாதிகாரமாய்
என்னை
முழுவதும்
ஆக்கிரமித்துவிடுவாள்
என்பதை அறியாதவனாய்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், கவிதை, காதல் கவிதை, kathal kavithai, love poet, love, அத்துமீறல்கள்,

Mar 18, 2014

சிறுகதை: ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு


 ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு, சிறு கதை, மண் வாசனை, ஏற்றம், ஏத்தம்பட்டுப் பையம் வெள்ளிக்குச்சம்

தில்லாலங்கிடி லேலம்

பதினாறு வெத்தலையாம்

தில்லாலங்கிடி லேலம்

சின்னப் பையன் கொடுத்த பை

தில்லாலங்கிடி லேலம்

சிரிக்குதடி இடுப்பு மேலே

தில்லாலங்கிடி லேலம்


Mar 7, 2014

மரகதப் பச்சை பட்டுடுத்தி...



தொடுத்த மல்லிகையோடு
அகம் மலரச் செய்யும் 
சிரிப்புடன்
மரகதப் பச்சை பட்டுடுத்தி
கடந்து செல்கிறாள்
கன்னியொருத்தி...

கடந்த மாத்திரத்தில்
கடந்த காலத்தில் 
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது 
கண்களில்...

மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...

மயங்கிய மனம் மட்டும்
இன்னமும் 
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Mar 2, 2014

உதிரும் நான் -31

எந்த 
உத்தரவாதமும் 
இல்லை...

புதைக்கப்பட்டபின்
உயிர்த்தெழுவேன்
என்று...

ஆனாலும்
விழைகிறேன்,
அவளுள்
வி(பு)தைக்கப்படுவதற்காக...!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...