Apr 13, 2014

வாரம் ஒரு இலக்கியப் பாடல்: என் மகளைக் கண்டீர்களா?

இன்று ஆடவர்களும், பெண்களும் காதல் கொண்டால் ஜாதி, பணம், அந்தஸ்து எனப் பல காரணங்களைக் கூறி காதலித்த இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். காதலித்த இருவரும் மணம் செய்து கொண்டாலும் அவர்களை கொன்றாவது தமது ஜாதிப் பெருமையை நிலை நிறுத்திக்கொள்ளவே அபலரும் முயல்கிறார்கள். ஆனால் காதலித்தவர்களின் மன நிலை, அவர்களின் ஆசை, தேடல், விருப்பம் என யாவற்றையும் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள். இப்படித்தான் காதல் கொண்ட இருவரது நிலை ஊருக்குத் தெரிந்துவிட்டது. உடனே காதலன் காதலியை அழைத்து சென்று உடன்போக்கு (நம்ம மொழில ஓடிப்போயட்டான்). பெண்ணைப் பெற்றத் தாயும் அவளைத் தேடி அலைகிறாள். வழியில் சில அந்தணர்களைக் (அந்தணர்கள் என்பவர்கள் பிராமணர்கள் கிடையாது. இது பற்றி தனிப் பதிவில் ஒரு நாள் விளக்குகிறேன்) கண்டு தனது மகளின் அடையாளங்களைக் கூறி கண்டீர்களா? என கேட்கிறாள். அவர்களும் கண்டோம் எனக்கூறி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அறிவு தெளிந்த தாய், தனது கவலையை மறந்து வீடு திரும்புகிறாள். அந்த அந்தணர்கள் அந்தத் தாய்க்கு அப்படி என்ன ஆறுதல் சொன்னார் என அறிய கீழே தொடருங்கள். 


Apr 10, 2014

கடை திறப்பு - 2: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

பரணி பாடிய செயங்கொண்டார் புலவர் பெண்களே உங்களது நலிந்து போகும் இடையைப் போன்று ஆசை அனைத்தையும் துறந்த யோகியராகிய ஞானிகளும் நலிந்து போகிறார்கள் என்கிறார். அப்படி அவர் ஞானிகள் ஏன் பெண்களின் இடையினைப் போன்று நலிந்து போகிறார்கள்? அதற்கு என்ன காரணம் சொலியிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள கீழே தொடருங்கள். 

Apr 8, 2014

கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

வானவல்லிக்காக கரிகாற் திருமாவளவனின் வெற்றி பற்றி தேடியபோது கண்ட நூல் தான் கலிங்கத்துப் பரணி. கரிகாற் பெருவளத்தான் இமயம் வரை படையெடுத்து வென்ற பின், இமயத்தில் தனது புலிச்சின்னத்தை பொறித்தான் என்று சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் கூறுகிறது. கலிங்கத்துப் பரணியை வாங்கி வாசிக்கும் வரை அது போர் பற்றி விளக்கும் நூலாகவே கருதிக்கொண்டிருந்தேன். புத்தகத்தை வாங்காமல் விட்டிருந்தால் அதில் உள்ள 52 மயக்கவைக்கும் காதல் பாக்கள் பற்றி அறிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். அனைத்தும் சுவையுடையவை...

Apr 6, 2014

காதலும் இலக்கியமும்: நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

தலைவன் தலைவி முதல் களவி தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான் தலைவன். சின்னப் பொய் தான் தலைவன் கூறுகிறான், அவ்வளவுதான் தலைவியும் கவுந்துட்டாங்க....  அவன் கூறியதைக் கேட்டதுமே தலைவி மீண்டும் அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். அப்படி தலைவன் தலைவிகிட்ட என்ன பொய் சொல்லி கவுத்தான்னு தெரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க.

Apr 3, 2014

உதிரும் நான் -33

தங்கத் தேராய் 
அவள்
என் மனவீதியில்
வலம் வரும்போதெல்லாம்

சிதறுத் தேங்காயாய்
நெஞ்சம் நொறுங்குவது
ஏனோ???

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...