Apr 28, 2013

விட்டில் பூச்சியல்லடி நான்



உன் கோபக் கனலில் அருகில்
வந்தவுடன் எரித்துவிடும்
விட்டில் பூச்சியென்று
நினைத்தாயா என்னை!

நான் தேடிச் செல்வது –சிறு
வெளிச்சமும் அல்ல. நீ
எரித்தவுடன் சாம்பலாக
விட்டில் பூச்சியுமல்ல நான்.
பீனிக்ஸ் பறவையடி...

சுடும் சூரியன் எனத் தெரிந்தும்
உன்னை நோக்கியே
பறந்துகொண்டிருப்பேன்- உன்னாலே
நித்தமும்
மடிவதற்க்காய்!!!

................................வெற்றிவேல்...

Apr 26, 2013

காதல் துளிகள்





என் கனவு:

என் கனவின் தொடக்கம்

எதுவாகினும்- அது

ஏனோ சேருமிடம் மட்டும்

நீயாகிறாய்...



முரண்பாடு:

எத்தனை முறைதான் உன்னை

எழுத முற்ப்பட்டாலும்- மை

தீர்ந்து, சொல் காணாமல்

போய்விடுகிறது.



உன்னைப் பற்றிதான் எழுத

முடிகிறதே தவிற- உன்னை

எழுதிய பாடில்லை...!



என் தோஷம்:


என்  மனம்


உன்னை நினைக்கும்

போதெல்லாம்

பித்துப் பிடிக்கிறதே!


இதன் பெயர் தான்

கன்னி தோஷமோ!



மாற்றம்: 

புறமெங்கும் அனல் வெயிலாய்

புழுதிக் காற்று பறக்க...


அங்கமெங்கும் குளிர் காற்றாய்

புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்

யாவும் உன்னால் தானே!



இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!

பார்க்கும் பார்வையில் மட்டும்

என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து

செல்லும் பெண்ணே!!!


இன்னும் என்னை என்னவெல்லாம்

செய்வதாய் உத்தேசம்...

                                  -வெற்றிவேல்


Apr 21, 2013

நினைவெல்லாம் நீதானே!




காலைக் கருக்கள் விழிப்பிலும்
   காதல் கனவுகளை சுமந்தபடி உன் நினைப்பு...

நீராடும் வேளையிலும்
   நெஞ்சாங் குழிக்குள் உன் நினைப்பு...

ஆனந்தச் சிரிப்பின் மகிழ்ச்சியிலும்
   அலையலையாய் உன் நினைப்பு...

காலை உணவின் சூட்டினூடே
   கசிந்து வரும் உன் நினைப்பு...

நீ என்னை நினைத்து வரும் விக்கலிலும்
   தித்திக்கும் உன் நினைப்பு...

சித்திரை வெயிலின் புழுதிக் காற்றிலும்
   வீசும் காற்றில் வசந்தமாய் உன் நினைப்பு...

அந்திக் கருக்கும் நேரத்திலும்
   அடி மனதில் உன் நினைப்பு...

கோவிலுக்குச் செல்லும் வேளையிலும்
   தேவதையானவளின் திகட்டாத நினைப்பு...

இரவுக் கனவினுள்ளும் தலையணையில்
சேகரித்தபடி அடுத்தநாளின் தேடலுக்கான
தவழ்ந்து வரும் அடங்காத உன் நினைப்பு...

..................................................... வெற்றிவேல்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக நானே விருப்பட்ட இடத்தில் மீள முடியாமல் தொலைந்த காரணத்தினால் என்னால் இங்கு வர முடியவில்லை.. ஆகையால் தான் பதிவுகள் போட இயலவில்லை, நண்பர்கள்/ தோழிகளின் தளத்திற்கு செல்ல இயவில்லை. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.