Jan 25, 2014

உதிரும் நான் -28

கல்லும் மண்ணும் கடந்து 
உருண்டும், எழுந்தும், விழுந்தும்
நதியாய் பயணிக்கிறேன்
வாழ்க்கையில்...

சமுத்திரமாய் நீயணைப்பாய்
உன்னோடு சங்கமிப்பேன்
என்ற நம்பிக்கையில்....

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jan 23, 2014

கர்வம் தகரும் தருணத்திற்காக...

அருகில் அவள்
இல்லாததாலோ என்னமோ
எழுதும் கவிதைகளும்
உயிரற்றதாகவே தோன்றுகிறது...!

அவள் எச்சில் முத்தமில்லாமல்
தினமும் பருகும்
காலைத் தேநீரும்
கசக்கவே செய்கிறது...!

பெருத்த சண்டையில்லை
சிறு கருத்துவேறுபாடே.
அவள் சென்றுவிட்டாள்
நான் விட்டுவிட்டேன்...!

அவள் அழைப்பாளென நானும்
நான் அழைப்பேனென அவளும் - என
இருவருமாய் தோற்றுக்கொண்டிருக்கிறோம்
எங்கள் காதல் பந்தயத்தில்...!

அவளுடளான ஊடலில் என்
கர்வம் தகர்ந்து- காதல் பெருகும்
தருணத்திற்காக பொறுமையுடன்
காத்திருக்கிறேன் எங்களுக்காக...!!!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jan 5, 2014

என் உயிர்

உன் விழியில்
பார்வையாக
நான்...

உன் சுவாசத்தில்
மூச்சாக
நான்...

உன் செவியில்
ஒலியாக
நான்...

உன் இதழில்
வார்த்தையாக
நான்...

உன் நாவில்
சுவையாக
நான்...

உன் இதயத்தில்
துடிப்பாக
நான்...

உன் உடலில்
உதிரமாக
நான்...

உன் உயிரில்
உணர்வாக
நான்...

உ ன் விரலில்
தீண்டலாக
நான்...

உன் பாதம் பதியும்
இடமாக
நான்...

உன் நிழல் விழும்
நிலமாக
நான்...

உன் பசியில்
உணவாக
நான்...

உன் மகிழ்ச்சியில்
புன்னகையாக
நான்...

உன் சோகத்தில்
ஆறுதலாக
நான்...

உன் விழிமூடலில்
உறக்கமாக
நான்...

உன் உறக்கத்தில்
கனவாக
நான்...

உன் கனவில்
நினைவாக
நான்...

உன் தலைசாயும்
தாய் மடியாக
நான்...

உன் கொஞ்சலில்
மழலையாக
நான்...

உன் ஜீவனில்
காதலாக
நான்...

உன் காலம் வரை
உன்னில் எல்லாமாக
நான்...

உன்னில் நீயாக
நான் வாழ
வேண்டும்...

இம்மண்ணைவிட்டு
நீங்கும் போதும்
உன்னைவிட்டு நீங்காத
உன்
ஆன்மாவாக வேண்டும்
 நான்...

நீ எடுக்கும் எல்லா பிறப்பிலும்...

திருமதி.தேவி...
தஞ்சாவூர்...

திருமதி தேவி  மின்மடல் மூலம் அனுப்பிய பதிவு இது...

Jan 3, 2014

உதிரும் நான் -27

பெருந்தாகங்கொண்டு கோடைமழையை
விழுங்கத் துடிக்கும்
வயல் வெடிப்பாய்

கடுந் தாகங்கொண்டு
காத்திருக்கிறேன்
அவளுக்காய்...

சி.வெற்றிவேல்...  
சாளையக்குறிச்சி...