Jan 5, 2014

என் உயிர்

உன் விழியில்
பார்வையாக
நான்...

உன் சுவாசத்தில்
மூச்சாக
நான்...

உன் செவியில்
ஒலியாக
நான்...

உன் இதழில்
வார்த்தையாக
நான்...

உன் நாவில்
சுவையாக
நான்...

உன் இதயத்தில்
துடிப்பாக
நான்...

உன் உடலில்
உதிரமாக
நான்...

உன் உயிரில்
உணர்வாக
நான்...

உ ன் விரலில்
தீண்டலாக
நான்...

உன் பாதம் பதியும்
இடமாக
நான்...

உன் நிழல் விழும்
நிலமாக
நான்...

உன் பசியில்
உணவாக
நான்...

உன் மகிழ்ச்சியில்
புன்னகையாக
நான்...

உன் சோகத்தில்
ஆறுதலாக
நான்...

உன் விழிமூடலில்
உறக்கமாக
நான்...

உன் உறக்கத்தில்
கனவாக
நான்...

உன் கனவில்
நினைவாக
நான்...

உன் தலைசாயும்
தாய் மடியாக
நான்...

உன் கொஞ்சலில்
மழலையாக
நான்...

உன் ஜீவனில்
காதலாக
நான்...

உன் காலம் வரை
உன்னில் எல்லாமாக
நான்...

உன்னில் நீயாக
நான் வாழ
வேண்டும்...

இம்மண்ணைவிட்டு
நீங்கும் போதும்
உன்னைவிட்டு நீங்காத
உன்
ஆன்மாவாக வேண்டும்
 நான்...

நீ எடுக்கும் எல்லா பிறப்பிலும்...

திருமதி.தேவி...
தஞ்சாவூர்...

திருமதி தேவி  மின்மடல் மூலம் அனுப்பிய பதிவு இது...

12 comments:

  1. அருமையான கவிதை. ரசித்தேன். கவிதை எழுதியவருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. உணர்வுபூர்வமான கவிதை வரிகளைக் கண்டு மகிழ்ந்தேன் .
    எழுதியவருக்கும் பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  3. அருமை அருமை பகிர்வுக்கு நன்றி ....!
    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  5. அருமை! அருமை!

    //என் விரலில்
    தீண்டலாக
    நான்...// இதில் உன் விரலில் என்பது என் விரலில் என்று தவறாக வந்துவிட்டதா?

    ReplyDelete
  6. வரிகள் மிகவும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. Anonymous8:58:00 AM

    வணக்கம்
    தம்பி.
    கவிதையின் வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. சிறந்த பா/கவிதை வரிகள்

    ReplyDelete
  9. அருமை. படித்தேன், ரசித்தேன். என் தளத்தில்: அன்புடன் 2014.

    ReplyDelete
  10. உன்னில் நான் என்பதை;
    அழகு தமிழில் கூறினீர் ,
    வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...