Aug 1, 2015

பாகுபலி - இயக்குனர் திரு.ராஜமௌலி'யிடம் சில கேள்விகள்???

Baahubali poster.jpgஇயக்குனர் திரு.ராஜமௌலிக்கு அன்பான வணக்கம்.
  
நான் ஈ வெற்றிப் படத்திற்குப் பிறகு பாகுபலி எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். திரைப்படத்தின் தொடக்கத்தில் சிவகாமி தேவியாரின் தியாகம், சிவா லிங்கத்தைத் தூக்கிக்கொண்டு நீர் வீழ்ச்சியில் வைத்த காட்சி, கட்டப்பர் சிவாவைக் கொலை செய்ய ஈட்டியை எடுத்துக்கொண்டு ஓடி செல்லும்போது திடீரென்று திரும்பும் சிவாவைப் பார்த்து பாகுபலி என எண்ணி அவனது காலினைத் தனது தலைமேல் வைக்கும் காட்சிகள் உடலைச் சிலிர்க்கவைத்தன. தேவசேனா சுள்ளிகளைப் பொறுக்கும் போது கட்டப்பா அவளிடம், தாயே, "நான் உங்களை விடுவிக்கப் பாடுபடுகிறேன். தாங்கள் சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்று தட்டிவிடும்போது ஆக்ரோசமான தேவசேனாவின் வசனங்கள் அருமை.