Oct 26, 2011

நிலா இருள்

http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_26.html
பகலெல்லாம் திரிந்த சூரியனோ மேற்கில் மறைந்துவிட்டான்,

தொடு வானத்தில் தெரிந்த மதியோ உச்சிக்கும் வந்துவிட்டான்...

நள்ளிரவு பேச்செல்லாம் ஓய்ந்து விட்டது,

கோட்டானின் சத்தமும் அடங்கி விட்டது...

உலகமே சுகமாகத் தூங்குகிறது,

என்னைத் தவிர...

கால்கள் ஓய்வைத் தேடுகிறது,

மனம் மறுப்பதனால் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறேன்

மேகம் மறைத்த நிலா இருளில்,

நீ மறந்து போன நம் நேசத்தை எண்ணி...

Oct 7, 2011

எட்டாக் கனி


http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_07.html 
காதல் வராத மனிதனென்று யாரும்
பிறப்பதில்லை இப் பூவுலகில்.
அது பிறக்கும் போதே
விதைக்கப் பட்டும் விடுகிறது.
மனதினுள் புகுந்து காதலை
பூக்கச் செய்யும் மழைத் துளிக்காகத்தான்
காத்திருக்கிறது எல்லா மனமும்.
கடந்து செல்லும் மேகங்களை
எல்லாம் உற்று நோக்கியபடி...
சிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது
பலருக்கு அது எளிதில் பூப்பதில்லை
எட்டாக்கனியாகவே உள்ளது...
காத்திருப்போம்
எட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......
தங்கள் வருகைக்கு நன்றி.!!!

Oct 5, 2011

பிரிவினால் தற்கொலைக்குத் துணிந்த நண்பன்

ஆயுத பூஜை திருவுவிழாவிற்காக ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை, அதிலும்  இந்த முறை பல்கலைக்கழகத்தில் எந்த வீட்டு வேலையும் கொடுக்காததால் மிகுந்த  மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நான், சற்று விரக்தியுடன் ஊருக்கு வந்தேன்.  காலையிலிருந்து அனைத்து வேலைகளும் சிறிது மந்தமாகவே இருந்தது. அதிலும் இன்று காலையில் நண்பள் சரியாக பெசாததனால் பிடிப்பு இன்னும் குறைந்திருந்தது. இவள் பேசும்போது எதோ புதிதாக பழகும் நபரைப் போல் பேசினாள்.