Showing posts with label வானவல்லி. Show all posts
Showing posts with label வானவல்லி. Show all posts

May 20, 2016

வானவல்லி – சரித்திரப் புதினம்: முன்னோட்டம்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் பருத்திக் காட்டிற்கு குரங்குக் கூட்டம் வந்துவிட்டது. காலையில் பொழுது விடிவதற்கு முன்பு காட்டிற்கு சென்றால் இருட்டியதும் தான் வீட்டிற்கு திரும்புவேன். சாப்பாடு தேடி வந்துவிடும். குரங்குகளை ஓட்டிவிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் தனிமை என்னைப் பீடித்துக் கொள்ளும்.

தனிமைப் படுத்தப்படும் சமயத்தில் தான் மனதின் ஆழத்தினுள் பூட்டி வைத்திருக்கும் பல நினைவுகளும் கிளர்ந்து எழுந்து பாடுபடுத்தும். அந்தத் தனிமையை இப்போது நினைத்தாலும் என்னை நினைத்து நானே பரிதாபப் படுவேன். அந்த அளவிற்குக் கொடூரமான தனிமை அது. வேலை கிடைக்காத விரக்தி, கடன், ஏமாற்றம், காதல் என அனைத்தும் ஒன்று சேர்ந்து என்னை ரணமாக்கத் தொடங்க அவற்றிலிருந்து விடுபட்டுக் கொள்ளவே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.

Mar 7, 2016

வானவல்லி - புத்தக வெளியீடு

நன்பர்களுக்கு வணக்கம்,

வானவல்லி புதினம் நான்கு பாகங்களாக வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வானதி பதிப்பகம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து வானவல்லி வானதி'யில் கிடைக்கும்.

நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சி.வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...

Dec 18, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -3

சாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.

Dec 11, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -2

முன்பொருநாள் சாரங்கலன்1 என்னும் சிறுவன் தன்னந் தனியாக சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கொரு பேய்மகள் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தின்றுகொண்டு எலும்புகளை கையிலேந்தி இரத்தம் சொட்ட சொட்ட கூத்தாடிக் கொண்டிருந்தாள். இதனைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய நடுநடுங்கி, பயந்து ஓடிவந்து தாய் கோதைமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதைமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை.

Dec 4, 2013

சரித்திர நாவல்: வானவல்லி -1

ஈழம், யவனம், சாவகத் தீவு, பவளத்தீவு, பாண்டிய நாடு, சீனம், கடாரம்  போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும் கவரும் மாபெரும் துறைமுக நகரமாக நாவலந்தீவினுள் அமைந்திருந்த மாபெரும் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது புகார்.

பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.