Feb 26, 2016

கடிதம் - 2: நண்பன் கடற்கரை விஜயனுக்கு...

நண்பன் கடற்கரை விஜயனுக்கு,

வணக்கம்...

மன்னித்துக்கொள் கடல். நேற்று உன்னுடன் பேசும்வரை நீ அனுப்பிய கடிதம் பற்றி நான் மறந்தே போனேன். நீ பேசிய பிறகுதான் உனக்கு பதில் எழுத வேண்டும் என்ற நினைப்பே எனக்கு வந்து சென்றது. ஒரு மாதத்திற்கு முன் நான் எழுதிய கடிதத்தின் சில வரிகளை நீ மணப்பாடமாக தெரிவித்தாய். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன் நீ எழுதிய உனது கடிதத்தில் சில வரிகளைக் கூட என்னால் ஞாபகம் வைத்துக்கொண்டு உன்னுடன் கடிதம் பற்றி விவாதிக்க முடியவில்லை. நீ மனதில் என்னவெல்லாம் நினைத்து வருந்தியிருப்பாய் என்று நினைக்கையில் கவலையாக இருக்கிறது. பகிரங்க மன்னிப்பைக் கோருகிறேன் கடல்.

Feb 13, 2016

பேரன்புள்ள காதலிகளுக்கு...

பேரன்புள்ள காதலிகளுக்கு,

வெற்றிவேல், அந்தக் கடிதத்தை நீ அப்படித் தொடங்கியிருக்கக் கூடாது. அதை வன்மையாக ஆட்சேபனை செய்கிறேன் நான். நீ இப்போதிருக்கும் தருணத்தில்

“உச்சி வானில்

மேகங்களுக்கிடையில் நீந்திக்கொண்டிருக்கும் நிலா

கீழே விழப்போகிறது...

மேற்கு வானம் எரிந்துகொண்டிருக்கிறது.

இதே போன்றதொரு மாலைப் பொழுதில்

இருவரும் உரையாடிக் கொண்டிருந்தோம்...

ஆனால்,

அவள் இப்போது என்னுடன் இல்லை” என்பன போன்ற துயர் மிகு வரிகளை எழுதுவாய் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால், நீயோ இந்த முன்னிரவில் உனது காதலிக்கு மன்னிக்கவும் உனது காதலிகளுக்கு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறாய். வர வர உனது போக்கினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. துயரத்துடன் இருக்க வேண்டிய சமயத்தில் “உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்” என்று கவிதை எழுதுகிறாய்.