Showing posts with label தவகல்கள். Show all posts
Showing posts with label தவகல்கள். Show all posts

Oct 21, 2013

தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட காலமானதேன்?

களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், களப்பிரர்கள் எனப்படுபவர்கள் என்பவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற இலக்கிய மாற்றங்கள் மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றியும் கடந்த மூன்று பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் களப்பிரர்கள் காலம் மட்டும் ஏன் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி விரிவாக அறிய முற்படுவோம்...

Sep 19, 2013

இருண்ட கால தேடல்: களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்

கடந்த இரு பதிவுகளில் களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் காலம் ஏன் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி பேசியிருந்தோம். இக்காலத்தில்  நடைமுறையில் இருந்ததாக  கூறப்படும் தமிழ் எழுத்து முறை மற்றும் இலக்கிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். 

களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது

Sep 11, 2013

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

கடந்த பதிவில் (மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்)  களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.

Sep 6, 2013

மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்

கடந்த தமிழ் பற்றிய பதிவில் களப்பிரர்கள் பற்றி குறிப்பிட்டுருந்தேன், அதாவது களப்பிரர்களின் காலத்தையே கடந்து வந்தது நம் தாய் மொழி... இந்த நவீன களப்பிரர்களை விரட்டாதா என்ன!!! பிறகு சிலர் இந்த களப்பிரர்கள் பற்றி தெளிவான விளக்கங்களை வேண்டி பின்னூட்டம் அளித்திருந்தனர். எனது தேடலுக்கும், என் பதிவிற்கும் சற்று இடைவெளி விழுந்தது உண்மையே.  மேலும் எந்த சார்பும் இல்லாமல் நடுநிலையில் தேடினால் மட்டுமே களப்பிரர்கள் பற்றி நம்மால் ஓரளவு அறிந்துகொள்ள இயலும்...

Aug 17, 2013

நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!


அனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவாறு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...

Jul 17, 2013

பலாப் பழம் வாங்க போறீங்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்!

சந்தைல பலாப்பழம் வாங்குவோம், பழம் பெருசா இருக்கும், கடைக் காரரும் நிறைய சுளை இருக்கும்னு சொல்லி வாங்க வச்சிடுவார். நாமளும் வீட்டுக்கு வந்து பழத்தை சாப்பிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு பலாப் பழம் விற்ற அந்த பெரியவர திட்டிகிட்டு இருப்போம், ஏமாற்றுக் காரர் என்று. ஏன்னா உள்ள சுளையே இருக்காது, மாட்டுக்கு மட்டும் ஒரே கோதா இருக்கும்.  இந்த பிரச்சனை இனி ஏற்ப்படாம இருக்கனுமா இந்த பதிவை படிங்க. பழத்த வெட்டாமலே உள்ள இருக்கறது எத்தனை சுளை என்று எண்ணிவிடலாம். 

Jun 15, 2013

தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்

தி.மு.க தமிழர்களுக்கு செய்த துரோகம் ஊர் அறிந்ததே, ஆனால் அக்கழகம் 'தமிழ்' தான் உயிர் மூச்சு என அழைத்து அதற்க்கும் பெரும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கின்றனர். ஆம். மாபெரும் துரோகம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமலும் இருந்ததன் விளைவு.

Jun 6, 2013

ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் கோயம்புத்தூர் சென்ற போது என்னைப்பார்த்து ஒரு CISF வீரர் கேட்ட கேள்வி இது தான்...

ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா? என்று.

ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே நான் ஒரு ஹிந்துஸ்தானி என்றால், எங்களுக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவை இல்லை. நான் தமிழன் என்பதிலேயே பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினேன்...

Oct 22, 2012

அழகான ஆண்கள்: சத்தியமா நான் மனிதர்களைப் பற்றி சொல்லுலீங்க

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம், தங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை திருநாள் வாழ்த்துகள்... கல்விச் செல்வமும், பொருள் செல்வமும் பெருகட்டும் அனைவருக்கும்...

சமீபத்தில் நான் முகப்புத்தகத்தில் படித்த ஓர் பொன் மொழி...

உலகில் உள்ள ஆண் இனம் அனைத்துமே அழகானதுதான். ஆனால் இந்த மனித இனத்தைத் தவிர...
                                                             
 -------------- மேற்க்கத்தியப் பழமொழி---------------

அது எந்த அளவிற்கு உண்மை என நான் தேடிய போது கிடைத்த சில நிழற்ப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

பார்த்து எப்படி உள்ளது என்று கமெண்டில் சொல்லிட்டுப் போங்க...

Oct 7, 2012

எதிர்கால நினைவுகள்

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

Sep 30, 2012

மனித மூளையும் இரண்டு திருடர்களும்: ஓர் அசாத்திய தகவல்

மனித மூளை பற்றி நாம் அறிவதெல்லாம் உலகிலேய மிகவும் சிக்கலான ஓர் அசாத்தியமான அமைப்பு. அது நமது நரம்பு மணடலத்தின் தலைமை கட்டுப் பாட்டு அமைப்பு என்றும் அதுதான் நமது உடலை கட்டுப் படுத்துகிறது என்றும் அறிவோம். (இதனை ஆங்கிலத்தில் The brain is the part of the central nervous system located in the skull. It controls the mental processes and physical actions of a human being.) ஆனால் இன்னும் நமக்கு நமது மனித மூளை பற்றி தெரியாத தகவல்கள் என்பதைவிட, அறியாத தகவல்கள் ஒன்று உண்டு என்றும் கூறலாம்.

கேட்டால்  சிறு அதிர்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.

Sep 19, 2012

புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்த நல் நாளில் நாம் விநாயகரையும் அவர் தென்னகத்தில் வேரூன்றிய விதத்தையும் சிறிது அலசலாம் என்று நினைக்கிறேன்....

அனைவரும் சிறிது சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியாக கி.பி.624 ஆம் ஆண்டிற்கு செல்லுங்கள், ஏனெனில் அப்போதுதான் நம்மால் சரியாக அறிந்துகொள்ள இயலும்.