Jul 3, 2016

மூன்றாவது காதல்

ஞாயிறு மாலைப் பொழுது. அப்போதுதான் மெரீனாவில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. மணலின் கதகதப்பையும், கடலிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றையும் ஒரு சேர அனுபவித்தபடியே அலைகள் பாதத்தைத் தொடாதபடி சற்றுத் தள்ளி நுரை பொங்கிய கடலலைகளையே பார்த்தபடி நடந்துகொண்டிருந்தான் சுதன்.

அப்போது அவனுக்குப் பின்னால் தொலைவிலிருந்து எழுந்த, “சுதா....” என்ற குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.