Jul 2, 2013

உதிரும் நான்- 7

ஏனோ நீ
சூடிச் செல்கையில் மட்டும் 
பருத்திப் பூவும்
வாசம் பெற்று என்னை
கிறக்கமடைய
செய்வதேனடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



33 comments:

  1. காதலில் தோல்வி

    கண்டதால் வந்ததா காதல் - இல்லை
    கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
    கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
    கலங்கினாய் எனைப் பார்த்து
    உறைந்தது என் உதிரம்.
    தளர்ந்தது என் சரீரம்.

    தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
    தாங்கியது என் இதயம்.
    காத்திருந்தேன் பல நாட்கள்
    தன்னந்தனியாய்......
    கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
    வந்தது உன் தகவல்
    வாடிய பூவும் மலர்ந்தது....!

    ஊருக்கு ராஜாவாய் நீ.....
    உன்னுடலுக்கு ராணியாய் நான்
    இருப்பேன் என நினைத்தேன்.
    அதில் ஒரு மாற்றம் கண்டேன்
    சரியென சொன்ன உதடுகள்
    சத்தியம் மறந்தது ஏனோ....!

    கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
    கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
    என் வாழ்வில் வந்த துன்பம்
    சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
    விடை தேடி அலைகின்றேன்
    விடிவொன்று கிடைக்குமோ....!

    புதிரான அகிலத்தில் - ஏன்
    பிறந்தேன் அன்று...
    திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
    இருட்டறையாய் மாறியது ஏனோ...
    புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
    புரியவில்லை போகும் பாதைகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... தங்கள் இனிய கவிதைக்கு மிக்க நன்றி... அப்படியே வருகைக்கும்...

      Delete
  2. அட...!

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  3. காதலில் விழுந்ததால் காணும் காகித
    பூவும் வாசனை தருமே!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம்...
      அவள் கார் கூந்தல் தழுவியதால்
      இந்த காகித பூவும் வாசம் பெற்றுவிடுகிறதே...

      ஹ ஹா...

      வணக்கம் தோழி... தமிழ் மண ஓட்டுக்கும், தங்கள் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. பருத்தி பூ வாசம் கவிதையில் இருக்கிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      தங்கள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் நன்றி... தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது...

      Delete

  5. வணக்கம்!

    உதிரும் தலைப்பில் உரைத்த கவிதை
    பதியும் மனத்துள் படா்ந்து!

    தமிழ்மணம் 4

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      தங்கள் மேலான வருகையும், தமிழ் மண ஓட்டும் மகிழ்ச்சியளிக்கிறது... மிக்க நன்றி.

      Delete
  6. வாசனை தொடர்ந்தும் வீசிட வாழ்த்துக்கள் சகோ :)

    ReplyDelete
    Replies
    1. அவள் வாசம் தான் பூக்கும் பூக்கும் மல்லிகை போல் ஓயாதது அல்லவா... வீசிக்கொண்டே தானே இருக்கும்!

      தங்கள் இனிய வருகைக்கு மிக்க நன்றி சகோதரி...

      Delete
  7. கவிதை வாசம் காதலியின் கூந்தல் பூ போலவே வாசம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் ரசனை அற்ப்புதம். என் கவிதையை அவள் கூந்தல் பூவோடு ஒப்பிட்டுள்ளீர்கள்... அழகு...

      மிக்க நன்றி...

      Delete
  8. Anonymous11:27:00 AM

    வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...நண்பா.

      Delete
  9. குழல் தழுவும் காற்றில் கூட
    சுகந்தம் வீசும் ....
    பருத்திப்பூவென்ன
    பட்ட இலை சூடினாலும்
    பலநூறு வாசம் வரும்.....

    அருமை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கவிதையும் மிகுந்த அழகாக உள்ளது... வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...சகோ.

      Delete
  10. அன்பின் வெற்றி வேல் - பருத்திப் பூ கூட வாசமாக இருக்கிறதா - பலே பலே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  11. லவ் மூட் ஸ்டாட் ஆயிருச்சில்ல

    ReplyDelete
    Replies
    1. லவ் மூட்!!! அது அப்பப்போ வரும் போகும்!

      Delete
  12. அழகான வரிகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. வாசமுள்ள (இல்லா) பூவோ?

    ReplyDelete
    Replies
    1. வாசமில்லா பூ, அவள் சூடியதால் வாசம் பெற்று மயக்கச் செய்கிறது...

      Delete
    2. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி அய்யா...

      Delete
  14. உள்ளத்தில் காதல் இருந்தால்
    உலகமே ஒளிமயமாகும்
    கள்ளமே ஒழிந்து கொளளும்
    கல்லிலும் மிருதுவாகும்
    எதிலும் ஆனந்தம் கொள்ளும்.

    அருமையான கவிதை. வாழத்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. காதல்வந்தால் வாசமில்லா மலருக்கும் வாசம் வந்துவிடுகிறதே :)





    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம்...

      அவள் அப்படித்தான்.

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...