Aug 12, 2012

அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

நிலவன்பனின் ஒரு பதிவைப் படித்தேன், அது மிகவும் அருமையாக இருந்தது. உடனே பகிர்ந்துவிட்டேன், உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே! இன்று நேற்றல்ல எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்போதும் பயன்படும்! இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள், ஆராய்ச்சிகள் வழியாகவும் ”தமிழ்” அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.
திருக்குறளின் பெருமை உணர்ந்து அனைவரும் அறியும் விதமாக பிரான்ஸ் அரசு தங்களுடைய இரயில்களிலும் பேருந்துகளிலும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து எழுதியுள்ளதோடு அதற்கு அருகில் எழுதியவர் தமிழர் திருவள்ளுவர் எனவும் எழுதியுள்ளார்கள். தமிழின், தமிழனின் பெருமை தமிழன் உணர்ந்துள்ளானோ இல்லையே ஆனால் வேற்று மொழி நாடுகள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

படத்தில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் இதுதான்!


மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

விளக்கம்: முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

Tu aurais tes adorateur, Ô Lune
si tu rayonnais comme le visage de la femme.

Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine

Explanation : If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

ஆனால் இந்தியாவில்? திருக்குறள் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் தமிழ்நாட்டில் தமிழ் எழுத/படிக்க எத்தனை பேருக்குத் தெரியும்? தன் அப்பன் யாரென்று தெரியாத இவர்களா இன்னொருவனின் அப்பனைப்பற்றி முழுமையாய் தெரிந்து கொள்ளப்போகிறார்கள்?

ஜெர்மன் தெரியாத ஜெர்மானியர்கள் உண்டா? பிரெஞ்சு தெரியாத பிரெஞ்சு மக்கள் உண்டா? ஏன் ஆங்கிலம் தெரியாத ஆங்கிலேயர்கள் உண்டா? ஆனால் தமிழ் தெரியாத தமிழர்கள் எத்தனை பேர்?

தற்போதைய சில பெற்றோர்களே கேட்கும் கேள்வி – தமிழ் படித்து எனக்கு/என் மகனுக்கு என்ன லாபம்? ஆங்கிலம் படித்தால் நல்ல வேலையில் வெளிநாட்டில் செட்டில் ஆகலாம். அடேய் பதறுகளா! உங்களுக்கு எல்லாமே வியாபாரம்தான் என்றால்

விபசாரம்கூட வியாபாரம்தான் ஏன் அதைச் செய்யவேண்டியதுதானே? எந்த மொழியையும் கற்க வேண்டியதில்லையே!

தன் மொழியான குரைத்தலைக் கற்காத எந்த நாயும் கழுதையின் கனைத்தலைக் கற்றுக்கொள்ளமுடியாது - அப்படியே கற்றுக்கொண்டாலும் கழுதையாகிவிடமுடியாது!

நன்றி – http://rste.org/
டிஸ்கி : ஒவ்வொருவருக்கும் ஆங்கில அறிவு தேவை - அதற்குமுன் உங்கள் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக முக்கியம்!

18 comments:

  1. நானும் படித்தேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  2. ரசித்து படித்தேன்! நல்ல பகிர்வு!

    இன்று என் தளத்தில்
    இதோ ஒரு நிமிஷம்!
    மணிப்பூர் மகாராணியும் அம்மன் வேஷக்காரியும்!
    http://thalirssb.blospot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே...

      Delete
  3. ஆனால் தமிழ் தெரியாத தமிழர்கள் எத்தனை பேர்?....இதைவிடக் கேவலம் வேறென்ன இருக்கு ?


    அட..நம்ம நிலவன்பன்....பாருங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. நம்ம நிலவன்பன் தான் தோழி...

      தமிழனாய் பிறந்து தமிழ் தெரியாமல் இருப்பது கேவலம் தான், ஆனால் அது தான் தற்போது நாகரிகமாக பார்க்கப் படுகிறது என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது...

      Delete
    2. இத்தனை சொந்தங்களா?

      ஹேமா அக்காவிற்கு நன்றி!

      Delete
    3. ஆம் சொந்தமே...

      Delete
  4. நன்றாக உள்ளது நண்பரே.. எங்கே நம் தளத்துக்கு வரக் காணோமே...? நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நாள்களாக என் தளத்தில் ஏற்ப்பட்ட பிழைகளை சரி செய்யவே நேரம் சரியாகப் போய் விட்டது. அதனால் தான் என்னால் எங்கும் வர இயலவில்லை. கண்டிப்பாக வருகிறேன் நண்பா...

      Delete
  5. வணக்கம் நண்பா.புரியவேண்டிய உண்மை இது.இப்போதெல்லாம் தமக்கு தமிழ் தெரியாது என்பதை கூட ஒரு நாகரீகமான தகைமையாக நினைக்கிறார்கள் போலும்....வெட்கம்.:).


    வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. வெட்கம் தான், ஆனால் நவ நாகரீக வெட்கம். இவர்களை என்ன செய்ய...

      Delete
  6. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  7. நல்லதொரு பகிர்வு நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  8. மக்களே ,இதை வேறு கோணத்திலும் சிந்திப்போம்..நான் சமீபத்தில் வாசித்த செய்தி .இலங்கை கலவரம் பின் ,நமது தமிழ்மக்கள் கனடா நாட்டில் இருந்துகொண்டு தமிழில்தாம் எல்லா விதமான மக்களுடன் தொடர்புகள் உள்ளார்கள்.என்று.அதை போல வணிகம், படையெடுப்பு , இன்னும் பலவிதமான தொடர்புகள் காரணம் வேற்று மக்கள் அல்லது நாடு பெயர்ந்து வாழ வேண்டிய சூழல் .எப்படியும் நமது மொழி மறக்காமல் காக்க வேண்டும்.இன்றுகூட சிங்கப்போரே பற்றி ஒரு தகவல் படித்தேன். தமிழின் முக்கியம் குறித்து .நாம்தாம் அதை செய்ய வேண்டும் .வளர்ப்போம் நமது தாய் மொழி ..
    அன்புடன் .கருப்பசாமி.

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்று அனைவரும் எளிதில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு நடந்தால் மகிழ்ச்சியே! தமிழ் வளரட்டும். வாழ்க தமிழ்...

      வருகைக்கு மிக்க நன்றி அப்பா... தொடர்ந்து வாருங்கள்...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...