Jul 17, 2012

பெட்ரோல் விபத்து விளைவும், முன்னேச்சிரிக்கை நடவடிக்கையும்

சில தினங்களுக்கு முன்னர் நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் வண்டியில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 300ம் மேற்ப்பட்ட கிராம மக்கள் கொள்ளப் பட்டனர் என்பதை நாம் அனைவரும் செய்தித் தாள்களில் படித்திருப்போம். ஆனால் இந்த மோசமான விபத்தின் காரணத்தை நீங்கள் கேட்டீர்களானால் மிகவும் வேதனைப் படுவீர்கள்.


இந்த விபத்திற்கு முதல் காரணம் வறுமையும், போதிய விழிப்புணர்வு இன்மையுமான அறியாமைதான் காரணம் என்றால் மிகையாகாது. பெட்ரோலை ஏற்றிச் சென்ற வாகனத்தின் எதிர்புறத்தில் வேகமாக வந்த வண்டியினால் ஏற்படப் போகும் விபத்தினைத் தவிர்க்க வாகன ஓட்டுனர் சாலை ஓரமாக வண்டியை திருப்ப முயற்சி செய்தார், அந்த நேரத்தில் கட்டுப் பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரத்தில் மோதி டேங்கரில் இருந்த பெட்ரோல் சிதறியிருக்கிறது, அந்த நேரத்தில் சாலையில் சென்ற மக்கள் அனைவரும் கேன் போன்ற பல உபகரணங்களில்  பெட்ரோலைப் பிடித்து சேகரிக்க முயற்சித்தனர். வாகன ஓட்டி எவ்வளவோ இது மிகவும் அபாயகரமானது, டெண்க்கரில் இருந்து வழியும் பெட்ரோல் எளிதில் தீப்பிடித்து வெடிக்கும் என்று, பொது மக்களிடம் எடுத்துக் கூறியும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாறாக சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளும் மோட்டார் வண்டியை நிறுத்தி பெட்ரோலை தங்கள் வாகனத்தின் டேங்கை நிரப்பினர். அந்த நேரத்தில் எதிர்பாராமல் வெடித்ததன் காரணமாக சுமார் 250 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பதை நினைக்கும் போது மனம் வேதனைப் படுகிறது...

அக்னேஷ்  உதே என்ற கிராமத்துப் பெண்மணி "எனது கணவர் வேலை நேரம் முடிந்து திரும்பிவிட்டார், அவரது எறிந்த மோட்டார் சைக்கிளை என்னால் அடையாளம் காண இயலுகிறது, ஆனால் அவரை மட்டும் என்னால் காண இயலவில்லை" என கதரியதைப் பார்த்தால் கண் கலங்கவே செய்தது.

ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா மிக்கவே எண்ணெய் வளம் மிகுந்த நாடு, ஆனால் தீவிரவாதம், உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அந்த நாடு மிகுந்த வறுமையில் தலைவிரித்து ஆடுகிறது.

இனி  நாம் சாவகாசமாக எண்ணெய் விபத்திலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று  பார்ப்பதற்கு முன்னாள் அது எப்படி எளிதாக தீப்பிடிக்கிறது என்றுப் பார்க்கலாம்....

எண்ணெய் சாதாரணமாகவே எளிதில் தீப்பிடிக்கக் கூடியப் பொருள். அதற்குக் காரணம் அதன் Fire and Flash Point  வெப்பநிலை மிகவும் குறைவாக இருப்பதே காரணம் ஆகும்.

Fire மற்றும் Flash Point என்றாள் எந்த வெப்ப நிலையில் முதல் சுவாலையும், அப்புறம் தொடந்தும் எரியுமோ அதுதான்...

இந்த குறைந்த பட்ச வெப்ப நிலையை உருவாக்க 10  அடி தூரத்தில் உள்ள சிறு ராந்தல் அல்லது சீமண்ணெய் விலக்கு, கரண்ட் ஒயரில் ஏற்ப்படும் சிறு பொறி, சாலையில் செல்லும் வாகனத்தின் உராய்வு,ஏன் கவிழ்ந்த வண்டியிலிருந்து வழியும் பெட்ரோலினால் ஏற்ப்படும் உரைவே தீப்பிடிக்க போதுமானது.

இனி ஒரு பெட்ரோல் விபத்திலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.

இது போன்று எளிதில் தீப்பிடிக்கக் கூடியப் பொருள்களை ஏற்றி வருமுன், அந்த வாகன ஓட்டிக்கு எப்படி கட்டுப் படுத்த வேண்டும், எடுக்க வேண்டிய முன் எச்சிரிக்கைகள், யார் யாரிடம் தகவல் தெரிவிப்பது என அனைத்தும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

பிறகு அந்த வண்டியில் ஏற்றி வரும் நச்சு அல்லது எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களின் தன்மை, அதனைப் பற்றிய முக்கியப் பண்புகளை பலகையில் எழுதி மாட்டியிருக்க வேண்டும்.

முதலில் கவிழ்ந்த வண்டியை தனிமைப் படுத்த வேண்டும், தனிமைப் படுத்த வேண்டும் என்றாள் அந்த இடத்தைச் சுற்றி வாகனப் போக்கு வரத்து, மின் பரிமாற்றம், சுற்றி உள்ள மக்கள் என அனைத்தையும் சிறிது தொலைவு தள்ளி வைக்க வேண்டும்.

பொது  மக்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்...

இன்னும் இதனை அறிவியல் ரீதியில் விவாதிக்க ஆரம்பித்தால்  போரடிக்க ஆரம்பித்துவிடும் என்பதால், இத்துடன் முடித்துக் கொள்கிறேன் நண்பர்களே...

ஏதேனும் சந்தேகங்களோ அல்லது கருத்துகளோ இருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டுச் செல்லுங்கள்...

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அனைவருக்கும் உதவுங்கள்...

6 comments:

  1. என்ன தான் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும். நம் நாட்டில் மட்டும் இதை நிறுத்த முடியாது. காரணம் விலைவாசி. நைஜீரியா மிகவும் பழமை வாதிகள் மிகுந்த நாடு. அங்கே விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

    ReplyDelete
    Replies
    1. அவர்களுக்கு நாம் போதிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி விட்டால் போதும் என நினைக்கிறேன்... உயிர் என வரும்போது அதற்குத் தானே நம்மால் முன்னுரிமை அளிப்போம்...

      Delete
  2. மிகவும் பிரயோசனமான தகவல் பாஸ்............

    ReplyDelete
  3. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...
    வேதனைக்குரிய தகவல்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...


    "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், காருத்து வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...