Jan 26, 2016

மோகப் புயல்

என் உள்ளக்கிடங்கினுள்
மறைத்து வைத்திருக்கும் காதலெல்லாம்
மோகத்தீயாய் என்னுள்
சுடர்விடத் தொடங்கிவிட்டது...

காதல் மழையில் நனைந்துகொண்டிருந்த என்னை
உணர்சிகளால் ஆன
நரம்புகளுக்கிடையில் புறப்பட்ட
மோகப் புயல் சூழ்ந்து
சூறையாடுவதேனடி...

ஒளியினைப் பற்றிக்கொண்ட
நிலவினைப் போல
என் உயிரும் உனைப்பற்றிக்கொள்ள
துடித்துக்கொண்டிருக்கிறது...

என் மோகத்தீயை
நீயும் உணர்ந்தால்,
என்னை அணைத்துக்கொள்...

தோட்டாவைப்போல் உன் பார்வை
என்னைத் துளைக்கட்டும்...
வாளினைப் போல என்னைக்
கிழித்தெறியட்டும்...
இதழ்களால் எனை
இதமாகத் தீண்டு...
முத்தத்தினால் எனை
மூழ்கடிக்கச் செய்...
உடல் சிவந்து கண்ணும் அளவிற்கு கடி...
தீண்டலினால் எனை
கொழுந்துவிட்டெரியச் செய்...

உன்னைத் தீண்ட
உன்னை நேசிக்க
உன்னை அணைக்க
உனக்காகவே நான் பிறந்திருப்பதைப் போல
எனக்காகவே நீயும் பிறந்திருக்கிறாய் எனில்
உன்னிடம் இருப்பவையனைத்தையும்
பாரபட்சமின்றி
எனக்காகக் கொடுத்துவிடு...

அஸ்தமனத் தொடுவானில்
மறைந்துபோகும் வெளிச்சத்தைப் போல
நானும் கரைந்துவிடுகிறேன்
உன் மார்புகளுக்கிடையில்...

சி.வெற்றிவேல்.
சாளையக்குறிச்சி...

3 comments:

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...