Feb 15, 2015

உதிரும் நான் - 36

ஒற்றை மரக்கள்ளின் 
போதையை 
கண நேரத்தில் ஊட்டிவிடுகிறாள்...

பின்னாலிருந்து அழைக்கும் 
குழந்தையைப் பார்க்கும்
தருணங்களில்
திருட்டுத்தனமாக எனை நோக்கும்போது!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

4 comments:

  1. போதையா,கிறக்கமா சார்?

    ReplyDelete
  2. வணக்கம்

    இரசித்தேன்.. தம்பி..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...