Nov 28, 2011

வாக்கு மூலங்கள்:


 

என் செல்லமே, என் கண்ணே,

என் அன்பே...
என் கண்களுக்கு ஆணை இட்டேன்
நீ என்னைக் காணும் வரை விழித்திரு என்று,
கண்டு விட்டாய், இமைத்து விட்டேன்.

என் கால்களுக்கு ஆணை இட்டேன்
நீ வரும் வரை காத்திரு என்று,
வந்து விட்டாய், சென்று விட்டேன்.

என் மனதிற்கு ஆணை இட்டேன்
நீ நுழையும் வரை திறந்திரு என்று
நுழைந்து விட்டாய், அடைத்து விட்டேன்.

என் உயிருக்கு ஆணையிட்டேன்
நீ இறக்கும் வரை வாழ்ந்திரு என்று
இறந்து விட்டாய்- நான் மட்டும்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,
இந்த கவிதை வாக்குமூலங்களுக்காக

இதோ
முடிந்தவுடன் இறந்துவிடுகிறேன்...
முடிந்தும் விட்டது!
நாளைய காதலர்கள்
இதற்கு தீர்ப்பெழுதட்டும்!
பாவம்,
அவர்களாவது ஆணையிடாமளிருக்க!!!

No comments:

Post a Comment

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...