சொல்லித் தெரிவதில்லையடி
நான் உன்
மீது கொண்ட நேசம்!
என்னிடம் கூறிவிட்டு,
அனுமதித்த பிறகா, நீ
என்னுள் வந்தாய்!
இல்லையே! நான்
அறியாமல் என்னுள் நுழைந்தாய்!
உறக்கத்தை களைத்தாய்!
நினைவினை சிதறடித்தாய்!
கனவின் முழு நாயகியும் ஆனாள்!!!
அன்பில் உருக வைத்தாய்!
ஏக்கத்தில் சிதற வைத்தாய்!
பிரிவினில் அழவும் வைத்தாய்!
இவற்றை, நீ என்
அனுமதியுடனா செய்கிறாய்!!!
இல்லையே!
நானும் சொல்லப் போவதில்லை!
என் அன்பை, நேசத்தை, காதலை
உன்னிடம்...
என்னைப்போல் நீயாக
எப்போது அன்பை
உணருவாய் என்று பார்க்கலாம்!
அதுவரையில் சொல்லப் போவதில்லை
நான், உன்னிடம் என் அன்பை...
காலம் தாழ்த்தி
கானல் கனவில் கரையுமுன்
சொல்லிவிடு என்னிடம்...
என் அன்பே!!!
சொல்லித் தெரிவதில்லையடி!
என் காதல் உன்னிடம்.
சொல்லித் தெரிவதில்லையடி...!!!