காதலை
மெல்ல தட்டி எழுப்பினேன்...
பீனிக்ஸ் பறவையாக
உயிர்பெற்று
சிறகடித்தது வானில்...
கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...
எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...
தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...
நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...
வசந்தமென எண்ணி
கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...
எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...
தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...
நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...
வசந்தமென எண்ணி
அவள் பார்வையில் அகப்பட்டதும்
எரிந்து பொசுங்கி
எரிந்து பொசுங்கி
சாம்பலாகிவிட்டது
என் காதல் பீனிக்ஸ்.
என் காதல் பீனிக்ஸ்.
மெல்ல உயிர்கொடுத்து
அவளுக்காக
என் காதலை தட்டி
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...