காலைக் கருக்கள் விழிப்பிலும்
காதல் கனவுகளை சுமந்தபடி உன்
நினைப்பு...
நீராடும் வேளையிலும்
நெஞ்சாங் குழிக்குள் உன்
நினைப்பு...
ஆனந்தச் சிரிப்பின் மகிழ்ச்சியிலும்
அலையலையாய் உன் நினைப்பு...
காலை உணவின் சூட்டினூடே
கசிந்து வரும் உன்
நினைப்பு...
நீ என்னை நினைத்து வரும் விக்கலிலும்
தித்திக்கும் உன்
நினைப்பு...
சித்திரை வெயிலின் புழுதிக் காற்றிலும்
வீசும் காற்றில் வசந்தமாய்
உன் நினைப்பு...
அந்திக் கருக்கும் நேரத்திலும்
அடி மனதில் உன் நினைப்பு...
கோவிலுக்குச் செல்லும் வேளையிலும்
தேவதையானவளின் திகட்டாத நினைப்பு...
இரவுக் கனவினுள்ளும் தலையணையில்
சேகரித்தபடி அடுத்தநாளின் தேடலுக்கான
தவழ்ந்து வரும் அடங்காத உன் நினைப்பு...
..................................................... வெற்றிவேல்.
அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக நானே விருப்பட்ட இடத்தில் மீள முடியாமல் தொலைந்த காரணத்தினால் என்னால் இங்கு வர முடியவில்லை.. ஆகையால் தான் பதிவுகள் போட இயலவில்லை, நண்பர்கள்/ தோழிகளின் தளத்திற்கு செல்ல இயவில்லை. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.