Nov 28, 2011

உந்தன் பிரிவும், உந்தன் நினைவும்


மனம் தவிக்கிறது
மனதில் அமைதி இல்லை;
புல்வெளியும், முல்படுக்கையாய்த் தோன்றுகிறது.
நடப்பது அனைத்தும் விரக்தியைத் தோன்றுகிறது
அடுத்து முன்னேற முடியவில்லை
வாழ்க்கையிலும்.
சோலைவனத்தையும்
பாலை வனமாக்கியது
உந்தன் பிரிவு.
காரனமரியாத் தவிப்பு
நெஞ்சு கனத்தது
கண்ணீர் நிரப்பியது கண்களை;
கண்களை மூடினேன்
உந்தன் பசுமையான நினைவுகள்
எந்தன் மனத்திரையில் ஓடியது.
மனம் நிறைவடைந்தது
உற்ச்சாகமானது,
என்னைச் சுற்றி அனைத்தும்
இன்பமயமாய்த் தோன்றியது.
உந்தன் பிரிவே எனக்கு நோயும் ஆனது
உந்தன் நினைவே அதற்க்கு மருந்தும் ஆனது...
மாலை மதியோ,
மேற்க்கு வானில்
கண்டும் காணாமலும் நகர்கிறான்
தினமும் என்னை நகைத்துக்கொண்டே...

No comments:

Post a Comment

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...