Oct 26, 2011

நிலா இருள்

http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_26.html
பகலெல்லாம் திரிந்த சூரியனோ மேற்கில் மறைந்துவிட்டான்,

தொடு வானத்தில் தெரிந்த மதியோ உச்சிக்கும் வந்துவிட்டான்...

நள்ளிரவு பேச்செல்லாம் ஓய்ந்து விட்டது,

கோட்டானின் சத்தமும் அடங்கி விட்டது...

உலகமே சுகமாகத் தூங்குகிறது,

என்னைத் தவிர...

கால்கள் ஓய்வைத் தேடுகிறது,

மனம் மறுப்பதனால் திரும்ப திரும்ப நடந்துகொண்டே இருக்கிறேன்

மேகம் மறைத்த நிலா இருளில்,

நீ மறந்து போன நம் நேசத்தை எண்ணி...

No comments:

Post a Comment

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...