Pages
▼
May 31, 2013
May 28, 2013
மியூசியத்தில் சுட்ட படங்கள்:
நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே! நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.